states

உ.பி., குஜராத், மகாராஷ்டிரா, மேற்குவங்கத்தில் கல்வீச்சு; வாகனங்கள், வீடுகள் தீவைத்து எரிப்பு!

புதுதில்லி, மார்ச் 31 - ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பண்டிகைகள் என்றாலே பதற்றமான நாட்களாக மாறி  விட்டன. ராம நவமி, அனுமன் ஜெயந்தி கொண்டாட்டங்களும் கூட  இதற்குத் தப்புவது இல்லை. இஸ்லா மியர்க்கு எதிரான வன்முறையை அரங்கேற்றுவதற்கு தோதான நாட்களாக, ராம நவமி, அனுமன் ஜெயந்தி விழாக்களை சங்-பரிவாரங் கள் மாற்றியிருக்கின்றன. அந்த வகையில் இந்தாண்டும், வட மாநிலங்களில் ராம நவமி  கொண்டாட்டங்கள் இஸ்லாமி யர்க்கு எதிரான வன்முறை வெறியாட்டங் களிலேயே முடிந்திருக்கின்றன.  குறிப்பாக, பாஜக ஆளும் குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் மேற்குவங்க மாநிலங் களில் ராம நவமி விழாக்கள் போர்க் களங்களாக மாற்றப்பட்டுள்ளன.  குஜராத் மாநிலம் வதோதரா வில் ராம நவமியை பேரணி நடத்திய இந்துத்துவா கூட்டத்தினர், பேரணி மசூதியருகே சென்ற போது வன்முறையை அரங்கேற்றி யுள்ளனர். சாலையோர கடைகள் மற்றும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கல்வீச்சு மற்றும் போலீஸ் தடியடிகளும் நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சத்திர பதி சம்பாஜி நகரில் புனரமைக்கப் பட்ட ராமர் கோயிலில் ராம நவமியை யொட்டி பேரணி நடத்தியுள்ளனர்.

இந்த பேரணியில் சென்றவர்கள் மசூதி அருகே இஸ்லாமியர்களுக்கு எதி ரான ஆத்திரமூட்டல் நடவடிக்கை களில் ஈடுபடவே, அதையொட்டி, கல்வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனால், “இந்த சம்பவத்திற்கு யாரேனும் அரசியல் சாயம் பூச  முயற்சித்தால் அது துரதிஷ்டவச மானது” என துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சமாளித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் ஹவுரா வில் உள்ள ஷீபூர் பகுதியில் ராம  நவமியை முன்னிட்டு நடைபெற்ற பேரணியிலும் கலவரம் தூண்டி விடப்பட்டு உள்ளது. இங்கும் கல்வீச்சு, படுகாயம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு உள்ளன.  “அனுமதி வழங்கப்படாத சாலை வழியாக ராமநவமி ஊர்வலம் நடத்தப்பட்டதே, மோதலுக்கு கார ணம். வகுப்புக்கலவரங்களை நடத்த  வெளி மாநிலங்களில் இருந்து குண்டர்களை வேலைக்கு அமர்த்தி யுள்ளனர். அவர்களது ஊர்வலத்தை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. ஆனால் வாள் மற்றும் புல்டோசர் களுடன் ஊர்வலம் செல்ல அவர் களுக்கு உரிமையில்லை. ஆனால் ஹவுராவில் இதைச் செய்ய அவர் களுக்கு எப்படித் துணிச்சல் வந்தது?”  என்று கேள்வி எழுப்பி முதல்வர் மம்தா  பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா, லக்னோ நகரங்களிலும் ராமநவமி பேரணியும் கலவரக் காடாக மாற்றப்பட்டுள்ளது.