இளங்கலை சேர்க்கை படிவத்தில் உருது நீக்கப்பட்டு “முஸ்லிம்” ஒரு ‘மொழியாக’ சேர்ப்பு
தில்லி பல்கலைக்கழக நிர்வாகம் அடாவடி
நாட்டின் முக்கியமான பல்கலைக்கழ கங்களில் ஒன்று தில்லி பல்கலைக் கழகம் ஆகும். மோடி பிரதமர் ஆன பின்பு தில்லி பல்கலைக்கழகம் அடிக்கடி சர்ச்சை யில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது. அதாவது கல்வியில் காவியை நுழைக்க தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு சட்டப் படிப்புக ளில் “மனுஸ்மிருதி” சார்ந்த பாடங்களைச் சேர்க்க வேண்டும் என்று தில்லி பல்கலைக் கழக நிர்வாகம் பரிந்துரைத்தது. இதற்கு பேரா சிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக குழுவைச் சார்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்த நிலையில், “மனுஸ்மிருதி” சேர்ப்பு பரிந்துரை வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து சமீபத்தில், சமஸ்கிருத பாடத் திட்டத்தில் மனுஸ்மிருதி அறிமுகப்படுத்தப் பட்டது. இதற்கு அனைத்து தரப்பில் இருந்தும் விமர்சனங்கள், எதிர்ப்புகள் எழுந்தன. பல் கலைக்கழக பேராசிரியர்களும், மாணவர்க ளும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் இருந்து மனுஸ்மிருதியை நீக்க முடிவு செய்துள்ளோம் என பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் சிங் ஜூன் 13 அன்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், மீண்டும் தில்லி பல்கலைக் கழகம் இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் மூலம் வகுப்புவாத சர்ச்சையில் சிக்கியுள்ளது. தற்போது தில்லி பல்கலைக்கழகம் தனது இளங்கலை சேர்க்கை படிவத்தில் “உருது” என்பது நீக்கப்பட்டு “முஸ்லிம்” மதத்தின் பெயரை ஒரு மொழியாக சேர்த்துள்ளது. அதே போன்று மைதிலி, போஜ்புரி, மகாஹி போன்ற மொழிகளுக்குப் பதிலாக “பிஹாரி” என குறிப்பி டப்பட்டுள்ளது. “பிஹாரி” என்பது ஒரு மொழி அல்ல, மாறாக இந்தியாவின் பீகார் மாநிலத்தில் வசிக்கும் மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப் படும் சொல்லே. ஆனால் பிஹாரி என்ற வார்த்தை யை சேர்த்து இருப்பது கடும் சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது. ஜனநாயக ஆசிரியர் முன்னணி கண்டனம் இந்த வகுப்புவாத சர்ச்சையை ஜனநாயக ஆசிரியர் முன்னணியின் (DTF) செயலாளரும், பேராசிரியருமான அபா தேவ் ஹபீப் தான் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”உருது நீக்கப்பட்டு “முஸ்லிம்” மதத்தின் பெயரை ஒரு மொழியாக சேர்த்து இருப்பது இஸ்லாமிய வெறுப்பு மற்றும் வகுப்புவாத மனநிலைக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். ஆனால் கல்வி சார்ந்த இடங்களில் இது மிகவும் மோசமானது” என ஹபீப் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே போல அகில இந்திய கல்வி உரிமை மன்றம் (AIFRTE) வெளியிட்டுள்ள அறிக்கை யில்,”தில்லி பல்கலைக்கழக சம்பவம் வெளிப் படுத்துவது யாதென்றால், விரைவில் “இந்து” என்ற சொல் இந்தியை ஒரு மொழியாக மாற்றும் சூழல் கூட உருவாகலாம். தில்லி பல்கலைக்கழ கத்தின் செயல் அறியாமையால் நிகழ்ந்தது அல்ல. இது ஒரு வகுப்புவாத நடவடிக்கை ஆகும். அதனால் தில்லி பல்கலைக்கழகம் பொது மன்னிப்புக் கேட்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது. உருதுப் பேராசிரியரும், பிரபல அரசியல் விமர்சகருமான அர்ஜுமந்த் ஆரா,”தில்லி பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த ‘பிழை’ உண்மை யில் ஒரு ‘பரிசோதனை’ தான். இதுபோன்ற அபத்தமான விஷயங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளன. அதனால் எந்த வகையிலும் இதை ‘பிழை’ என்று கருத முடியாது. மேலும் ‘உருது’ மொழிக்கு மட்டும் பதிலாக ‘முஸ்லிம்’ என்று மாற்றப்படவில்லை. ‘பிஹாரி’ என்பதை ஒரு மொழியாகக் குறிப்பிடும் அளவிற்கு தகுதி இல்லாத நபர்கள் தில்லி பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார். காங்கிரஸ் கட்சி,”இது நன்கு திட்ட மிடப்பட்ட சதி” என குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் பாஜக,”தில்லி பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த சம்பவம் மனிதத் தவறு காரணமாக நிகழ்ந்தது” என கூறி சமாளித்துள்ளது.