states

img

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி எரிபொருள் விலையை குறைத்துள்ளோம்!

புதுதில்லி, அக்.29-  ஒன்றிய பாஜக அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி எரிபொருட்களின் விலையைக் குறைத்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்குர் சிரிப்பு காட்டியுள்ளார். ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்குர் சனிக்கிழமை யன்று  செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அப்போதுதான் இவ்வாறு அவர் கூறியுள்ளார். “ஒன்றிய பாஜக அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளோம். பாஜக  ஆளும் மாநிலங்களில் எரிபொருட்களின் விலை குறைக்  கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் விலை குறைக்கப்படவில்லை” என்று அனுராக் தாக்குர் குறிப்பிட்டுள்ளார். நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லரைப் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2021-22 நிதியாண்டில், பணவீக்கத்தை நடுத்தர  கால அளவில் 4 சதவிகிதமாகவும், பணவீக்க உச்ச வரம்பை 6 சதவிகிதத்திற்கு உள்ளும் பராமரிக்க ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டு இருந்தது.

ஆனால், 2022 ஜனவரியில் 6.01 சதவிகிதம், பிப்ரவரி யில் 6.07 சதவிகிதம், மார்ச்சில் 6.95 சதவிகிதம், ஏப்ரலில்  7.79 சதவிகிதம், மே மாதத்தில் 7.04 சதவிகிதம், ஜூனில்  7.01 சதவிகிதம், ஜூலையில் 6.71 சதவிகிதம், ஆகஸ்டில் 7.00 சதவிகிதம், செப்டம்பரில் 7.41 சதவிகிதம் என்று தொடர்ந்து உயர்வில் இருந்து வருகிறது. ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவைக் காட்டிலும் சுமார் ஒன்றரை சதவிகி தம் பணவீக்கம் அதிகமாக உள்ளது.  அதேபோல கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும்  மோடி அரசு வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை யை, சிலிண்டர் ஒன்றுக்கு 253 ரூபாய் உயர்த்தி சாதனை படைத்தது. கடந்த 2021 ஜூலையில் 850 ரூபாய் 50 காசுகளாக இருந்த வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது 1068  ரூபாய் 50 காசுகள் என்ற உச்சத்திற்கு கொண்டு செல்லப்  பட்டுள்ளது. இதுபோலவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் - டீசல் விலைகள் குறைக்கப்படவில்லை. ஆனால், இதையெல்லாம் மறைத்து விட்டு, பணவீக்  கத்தைக் கட்டுப்படுத்தி, எரிபொருட்களின் விலையை யும் குறைத்து விட்டதாக அனுராக் தாக்குர் அப்பட்டமாக பொய் பேசியுள்ளார்.