குஜராத் : பலி 265 ஆனது கருப்புப் பெட்டி கிடைத்தது விமானத்தில் இருந்த கருப்புப் பெட்டி மீட்கப்பட்டது. இந்த கருப்புப் பெட்டியின் மூலம் விமான விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவரும். எனினும் எஞ்சின் கோளாறு காரணமாகவே விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 242 பேருடன் (230 பயணிகள், 2 விமானிகள், 10 பணியாளர்கள்) வியாழக்கிழமை அன்று மதியம் 1:39 மணிக்கு இங்கிலாந்து தலைநகர் லண்டனை நோக்கி ஏர் இந்தியாவிற்கு சொந்த மான “போயிங் 787-8 ட்ரீம்லைனர் இரட்டை ஜெட் விமானம்” கிளம்பியது. அடுத்த 3 நிமிட இடைவெளியில் விமான நிலையத்திற்கு அருகே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பி.ஜே.மருத்துவமனை விடுதியில் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. விமானத்தில் முழுகொள்ளளவில் எரிபொருள் இருந்ததால், விமானம் வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் சிக்கி 50 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த 191 பேர் அகமதாபாத் மருத்துவமனையில் பலத்த தீக்காயங்களுடன் அனுமதிக்கப் பட்டனர். வியாழனன்று இரவு 10 மணியள வில், “ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஒருவர் தவிர 241 பேரும்உயிரிழந்தனர். பிரிட்டன் குடியுரிமை பெற்ற விஸ்வேஷ் குமார் மட்டும் உயிர் பிழைத்தார்” என அகமதாபாத் காவல் ஆணையர் மாலிக் அறிவித்தார். குறிப்பாக இந்த விமானவிபத்தில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான விஜய்ரூபானியும் உயிரிழந்தார். மேகானி நகரில் மேலும் 24 பேர் பலியா? ஏர் இந்தியா விமானம் மேகானி நகரில் உள்ள பி.ஜே.மருத்துவக் கல்லூரி யுஜி விடுதி மற்றும் உணவகம் என இரண்டு கட்டிடங்களில் நேரடியாக மோதியது. விமானம் விழுந்தது மதிய நேரம் என்பதால், உணவகத்தில் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மாணவர்கள், ஊழியர்கள் மதிய உணவு உட்கொண்டு இருந்தனர். விமானம் விழுந்த உடனே வெடித்துச் சிதறியதால் விடுதி மற்றும் உணவகத்தில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் தீயில் சிக்கினர். வெள்ளிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி மேகானி நகரில் மருத்துவர்கள், மாணவர்கள், ஊழி யர்கள் என 24 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. இதன்மூலம் குஜராத் விமான விபத்தில் மொத்த பலி எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளன.
உயிரிழப்பு 290 ஆக அதிகரிக்கலாம்
விமானம் விழுந்த போது, விமானத்தின் இறக்கை, இதர பாகங்கள் மேகானி நகர் சாலை மற்றும் வீடுகளில் சிதறியது. சாலைகளில் சென்றவர்கள், சிறிய அளவிலான வீடுகளில் இருந்தவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை 290 ஆக உயரலாம் என கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக அகமதாபாத் மருத்துவமனையில் 290 சடலம் வைக்கும் பைகள் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.