புதுதில்லி, அக்.29- இங்கிலாந்தின் புதிய பிரதம ரான ரிஷி சுனக், இந்திய வம்சா வளியைச் சேர்ந்தவர் என்பதால், அவரது பதவியேற்பை பாஜக வினர் கொண்டாடி வருகின்றனர். காலனியாதிக்கத்தின் மூலம் இந்தியாவை சுமார் 200 ஆண்டு களாக, தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இங்கிலாந்திற்கு, இன்று இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரே பிரதமராக வந் துள்ளார். ஏற்கெனவே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நிலையில், தற்போது ரிஷி சுனக் இங்கிலாந்துக்கு பிர தமர் ஆகியிருப்பதால், இந்தியா விரைவில் உலகிற்கே ‘விஸ்வ குரு’வாக மாறும் என்று பாஜக-வினர் பெருங்கூச்சல் போட்டு வரு கின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு பாஜக மூத்த தலைவரும், ம.பி. முன்னாள் முதல்வருமான உமா பாரதியே பதிலடி கொடுத்துள் ளார். ‘அதில், ரிஷி சுனக் இந்தி யரே அல்ல’ என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதி விட்டிருக்கும் உமா பாரதி, “ரிஷி சுனக் முழுமையான ஒரு ஆங்கி லேயர்தான். மூன்று தலைமுறை களுக்கு முன்னரே அவரது குடும் பத்தினர் இந்தியாவில் இருந்து சென்றுவிட்டனர். இந்துவாக இருந்தாலும் அவர் இங்கிலாந் திற்கு சாதகமாகத்தான் செய லாற்றுவார்” என்று தெரிவித்துள் ளார். “இங்கிலாந்தில் பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக்கின் முன்னே பெரும் சவால்கள் காத்தி ருக்கின்றன. ஏனென்றால், மிக வும் அந்த நாடு சிக்கலான நிலை மையில் இருக்கும் தருணத்தில் அவர் பதவியேற்றுள்ளார்” என் றும் உமாபாரதி குறிப்பிட்டுள ளார்.