புதுதில்லி, டிச.10- ராணுவ பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படு வதாகவும், இந்த பிரச்சனை தீரும் வரை, அக்டோபர் மாதம் பதவி உயர்வு பெற்ற ஆண் அதிகாரிகளுக்கு பணி நியமனம் வழங்குவதை நிறுத்துமாறும் ராணுவ அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. ராணுவத்தை பொறுத்தவரை அதிக பாகு பாடுகள், பாரபட்சங்கள் பார்க்கப்படுவதாக பல ஆண்டுகளாக குற்றம் சாட்டப்பட்டு வரு கிறது. ராணுவத்தில் ஆண்கள் எண்ணிக்கை யை ஒப்பிடும்போது பெண்களின் எண்ணிக்கை என்பது மிகக்குறைவே. அதுவும் உயர் பதவி களில் பார்ப்பது அரிதானது. இந்நிலையில், “ஆண் அதிகாரிகளின் பதவி உயர்வுக்கு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்படு கிறது. ஆனால், பெண் அதிகாரிகள் பதவி உயர்வு இதில் பரிசீலிக்கப்படுவது இல்லை” எனக் கூறி இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவு களைச் சேர்ந்த 34 பெண் அதிகாரிகள் உச்ச நீதி மன்றத்தை அணுகினர். தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா அமர்வு முன்பு வெள்ளி யன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. பெண் அதிகாரிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி. மோகனா ஆஜரானார். 2022 நவம்பரில் ராணுவ அதிகாரிகள் வெளியிட்ட கடிதத்தின்படி, “சுமார் 249 பெண் அதிகாரி கள் கர்னல் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றுள்ள னர். இருப்பினும், அதிகாரிகளால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட தேர்வு வாரிய SB3 மற்றும் SB2 ஆகிய வற்றில் பெண் அதிகாரிகள் பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படவில்லை என்று வாதிட்டார். பெண் ராணுவ வீரர்களின் கீழ் பயிற்சி பெற்ற இளையவர்கள் அனைவரும், அதி காரிகளாகும்போது, பெண்களுக்கு மட்டும் ஏன் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ராணுவ தலைமையகம் சார்பில் ஆஜ ரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் மற்றும் அட்வகேட் கர்னல் பாலசுப்ர மணியம் ஆகியோர், நிதி அமைச்சகம் சமீ பத்தில் 150 காலியிடங்களுக்கு அனுமதி வழங்கி யதாகவும், அதற்கான தேர்வு வாரியங்கள் 2023 ஜனவரிக்குப் பிறகு நடத்தப்படும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆனால், அரசுத் தரப்பு வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. “பெண் அதிகாரிகளிடம் நீங்கள் (பாது காப்பு அமைச்சகம்) நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்று நாங்கள் உணர்கி றோம். நீங்கள் உங்கள் நியமன யுக்தியை ஒழுங்கமைக்க வேண்டும். பணி என்பது அனை வருக்கும் சமம். அதில் பாலின அடிப்படை யில் வேறுபாடு காட்டக்கூடாது. பெண் அதிகாரி களின் பிரச்சனை பரிசீலிக்கப்படும் வரை அக்டோபரில் நடத்தப்பட்ட SB3 இன் கீழ் பதவி உயர்வு பெற்ற ஆண் அதிகாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர். மேலும், தற்போதைய காலிப் பணி யிடங்களுக்கு பெண் அதிகாரிகள் ஏன் பரி சீலிக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப் பிய நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணை யை டிசம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.