புதுதில்லி, பிப்.23- “பொருளாதார சமத்துவமின்மை யை ஏற்படுத்தும் முதலாளித்து வத்தை, ஒரு மக்கள் நல அரசாங் கத்தால் ஒருபோதும் ஊக்குவிக்க முடியாது” என ஒன்றிய பாஜக அரசை, அதே கட்சியைச் சேர்ந்த வருண் காந்தி எம்.பி. சாடியுள்ளார். முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா - பெரோஸ் காந்தியின் பேர னும், சஞ்சய் காந்தி - மேனகா காந்தி தம்பதியின் மகனுமான வருண் காந்தி, பாஜக சார்பில் பிலிபிட் தொகுதி எம்.பி.யாக உள்ளார். வேளாண் சட் டங்கள் விவகாரத்திற்குப் பின், மோடி அரசின் பல்வேறு மக்கள் விரோத நட வடிக்கைகளை அவர் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில், மோடி அரசின் தனியார்மய நடவடிக்கைகளையும் வருண்காந்தி தற்போது தாக்கி யுள்ளார். 2021-22 நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டில், பொதுத்துறை நிறுவனங்களை விற்ப தன்மூலம் ரூ. 1.60 லட்சம் கோடி திரட்டு வது என்று அறிவித்து அதற்கான நட வடிக்கைகளில் மோடி அரசு இறங்கி யுள்ள நிலையில், “மக்கள் நல அர சாங்கத்தால் ஒருபோதும் முதலா ளித்துவத்தை ஊக்குவிக்க முடி யாது!” என்று சாடியுள்ளார். “வங்கிகள் மற்றும் ரயில்வேயை மட்டும் தனியார்மயம் ஆக்கினாலே 5 லட்சம் பணியாளர்கள் கட்டாய ஓய்வு பெற்றவர்கள்- அதாவது வேலை யில்லாதவர்களாக ஆகிவிடுவார்கள். ஒவ்வொரு வேலை முடிவடை யும்போதும், லட்சக்கணக்கான குடும்பங்களின் நம்பிக்கைகள் இழக்கப்படுகின்றன. சமூக மட்டத் தில் பொருளாதார சமத்துவமின்மை யை உருவாக்கும் முதலாளித்து வத்தை, ஒரு மக்கள் நல அரசாங்கத் தால் ஒருபோதும் ஊக்குவிக்க முடி யாது” என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள் ளார்.