states

img

தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் குடிமக்களின் அடிப்படை உரிமையை மறுக்க முடியாது!

ஒன்றிய அரசை சரமாரியாக விளாசிய நீதிபதி  டி.ஒய். சந்திரசூட் அமர்வு

புதுதில்லி, ஏப்.6- “தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் குடி மக்களின் அடிப்படை உரிமையை மறுக்க முடி யாது” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த ‘மீடியா ஒன்’ அங்குள்ள பிரபல தொலைக்காட்சிகளில் (MediaOne TV) ஒன்றாகும். ‘மத்யமம் பிராட்  காஸ்டிங் லிமிடெட்’ (Madhyamam Broad casting Limited) நிறுவனத்தால் இயக்கப் படும் இந்த தொலைக்காட்சிக்கான 10 ஆண்டு  ஒளிபரப்பு உரிமம், கடந்த 2021 செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்த நிலையில், ஒன்றிய அரசானது மீண்டும் உரிமத்தைப் புதுப்பித்து  வழங்க மறுத்து விட்டது. மேலும் 2022 பிப்ரவரி மாதம் ‘மீடியா ஒன்’ தொலைக்காட்சி ஒளி பரப்புக்குத் தடை விதித்த மோடி அரசு, மத்திய  தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்ச கத்தின் அனுமதிக்கப்பட்ட சேனல்கள் பட்டி யலில் இருந்தும் ‘மீடியா ஒன்’ டிவியை நீக்கி யது. இதனால் ஒளிபரப்பு சேவை முழுமை யாக முடக்கப்பட்டது. 

இது கேரளத்தில் விவாதத்தைக் கிளப்பி யது. கேரள முதல்வர் பினராயி விஜயன் துவங்கி, அரசியல் கட்சித் தலைவர்கள் பல ரும் மோடி அரசுக்கு தங்களின் கண்டனத்தைத் தெரிவித்தனர். அப்போது, நாட்டின் பாது காப்பு காரணங்களுக்காகவே இந்த தடை நட வடிக்கையை மேற்கொண்டதாக மோடி அரசு கூறியது.  அதைத்தொடர்ந்து ஒன்றிய அரசின் முடி வுக்கு எதிராக, ‘மீடியா ஒன்’ சேனல் ஆசி ரியர் பிரமோத் ராமன், கேரளா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு  எடுத்த முடிவு சரி என்று கூறிய கேரள உயர் நீதி மன்றம், ‘மீடியா ஒன்’ நிறுவனத்தின் வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ‘மீடியா ஒன்’ தொலைக் காட்சி மற்றும் கேரளா பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்  கள், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதி பதி ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய உச்சநீதி மன்ற அமர்வில் புதனன்று விசாரிக்கப்பட்டன. அப்போது, ‘மீடியா ஒன்’ தொலைக்காட்சி மீதான ஒன்றிய அரசின் தடையை, நாட்டின்  பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி  கேரளா உயர் நீதிமன்றம் நியாயப்படுத்து வதை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதி கள், ‘மீடியா ஒன்’ தொலைக்காட்சி மீதான  தடையை நீக்கி அதிரடியாக உத்தரவிட்டனர். 

மேலும், இந்த தீர்ப்பில் ஒன்றிய அரசின்  நடவடிக்கையையும் நீதிபதிகள் கடுமையாகச் சாடினர். “பத்திரிகை சுதந்திரத்தை சீர் குலைக்கும் வகையில் அரசு நியாயமற்ற கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது. வலு வான ஜனநாயகத்திற்கு சுதந்திரமான பத்தி ரிகை அவசியம். ஜனநாயக நாட்டில் பத்திரி கைகள் சுதந்திரமாக செயல்பட அரசியல் சாசன உரிமை இருக்கிறது. பத்திரிகைகள் அர சாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருக்க முடியாது; ஒரு செய்தி நிறுவனத்தை முடக்க  அரசாங்கத்தை விமர்சித்தனர் என்ற கார ணம் போதுமானதும் கிடையாது. அதிகாரத்தி டம் உண்மையைப் பேசுவதற்கும், குடி மக்களுக்கு கடினமான உண்மைகளை முன் வைப்பதற்கும் பத்திரிகைகளுக்கு கடமை உள்ளது. ஒரு சேனலுக்கான உரிமத்தை புதுப்  பிக்காதது பேச்சு சுதந்திரத்திற்கான தடை யாகும்.  தேசப்பாதுகாப்பு என்ற பெயரில் குடி மக்களுக்கான அடிப்படை உரிமைகளை பறிக்கக் கூடாது. உரிமத்தை வழங்க மறுப்ப தற்கான காரணங்களை வெளியிடாமல் இருப்  பதும், மூடி முத்திரையிடப்பட்ட உறையில் நீதி மன்றத்திற்கு மட்டும் வெளிப்படுத்துவதும் இயற்கை நீதியை மீறுவதாகும்” என்று நீதி பதிகள் குறிப்பிட்டுள்ளனர்.