புதுதில்லி, பிப். 23 - நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசானது, நாடாளு மன்றத்தையே ரப்பர் ஸ்டாம்ப் ஆக்கி வைத்திருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மாநாடு ஒன்றில் அவர் மேலும் பேசியிருப்பதாவது: நாடாளுமன்றத்தில் எங்கள் (எதிர்க்கட்சிகள்) கருத்துகளைக் கூற முயன்றால், அதற்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை. எங்கள் எம்.பி.க்களுக்கு நோட்டீசுகள் வழங்கப் பட்டுள்ளன. பெண் எம்.பி. ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதானி விவகாரத்தில் அவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த தற்கும், மக்கள் பிரச்சணை எழுப்பி யதற்குமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதானியின் சொத்து மதிப்பு ரூ.3,000 கோடியிலிருந்து ரூ.12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது குறித்தும், அதானி குழுமத்திற்கு எதி ரான முறைகேடுகள் குறித்த அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ‘ஹிண்டன்பர்க்’ வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் நாடாளு மன்றக் கூட்டுக் குழு (ஜேபிசி) விசார ணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பட்ஜெட் கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டது. ஆனால் அந்த கருத்துக்கள் நீக்கப்பட்டன. எஸ்பிஐ மற்றும் எல்ஐசி போன்ற சில பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் தொடர் சரிவை சந்தித்த நிலையிலேயே, இதுபற்றி விசாரிக்க ஒரு கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்தன. அதன்காரணமாகவே, இந்த விவ காரமும் நாடாளுமன்றத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.
ஆனால், பட்ஜெட் கூட்டத் தொடரில் காங்கிரஸ் எம்.பி ரஜனி பாட்டீல், அவை நடவடிக்கைகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துக்களின் அங்கீகரிக்கப்படாத வீடியோவை வெளியிட்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி யைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் மீண்டும் மீண்டும் அவையில் நுழைந்து, முழக்கங்களை எழுப்பிய காரணத் தால், சிறப்புரிமையை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர். மோடி அரசு நாடாளுமன்றத்தையே ‘ரப்பர் ஸ்டாம்ப்’ ஆக்கியுள்ளது. குறைந்தபட்ச ஊதியச் சட்டம், ஊழியர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் மற்றும் கொத்தடிமைத் தொழி லாளர் (ஒழிப்பு) சட்டம் ஆகியவை காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டன. மோடி - (அமித்) ஷாவால் எத்தனை சட்டங்கள் கொண்டு வரப் பட்டன. மாறாக, 2014-க்குப் பிறகு, மோடி அரசாங்கத்தால் தொழி லாளர்களின் உரிமைகள் பறிக்கப் பட்டன. கூட்டுக்களவாணி முதலாளி களுக்கு பயனளிக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்கள் வலு விழக்கச் செய்யப்பட்டன.
எதிர்க்கட்சி களின் கடும் எதிர்ப்பை மீறி, இந்த தொழிலாளர் விரோதச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எச்எம்டி, பெல், ஸ்டீல் ஆலை கள், ஐஐடி, ஐஐஎம், ஏஐஐஎம் மற்றும் இஸ்ரோ போன்ற முக்கிய மான நிறுவனங்களை இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு உரு வாக்கினார். காங்கிரஸ்தான் உரு வாக்கியது. நாங்கள் போலிகள் அல்ல, நாட்டை உருவாக்கியவர்கள். இன்று இந்த நிறுவனங்களில் பல லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், நரேந்திர மோடி வாக்குறுதி அளித்த ஆண்டுக்கு 2 கோடி வேலை கள் எங்கே? அரசுத்துறைகளில் மட்டும் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்குப் பதிலாக, துணைச் செயலாளர் செய்யக்கூடிய பணி நியமன ஆணை களை பிரதமர் மோடி வழங்கி வருகிறார். 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்து செயல்படுவார்கள். நட்பு கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். இல்லாவிட்டால் நாட்டில் சர்வாதிகாரம் ஏற்பட்டு ஜனநாயகம், அரசியல் சாசனம் என அனைத்தையும் அழித்துவிடும். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேசியுள்ளார்.