states

img

அம்பேத்கரின் லட்சியங்களை அழித்திடத் துடிக்கிறது பாஜக

புதுதில்லி, ஏப்.15- டாக்டர் அம்பேத்கரின் லட்சியங் களை நிறைவேற்றுவதற்குப் பதிலாக  அவற்றை அழித்து ஒழித்திடத் துடிக்கி றது பாஜக என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்  தாராம் யெச்சூரி கூறினார்.  டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று தலித் ஒடுக்கு முறை விடுதலை முன்னணி சார்பில் நாடா ளுமன்ற வீதியில், அவரது படத்திற்கு மல ரஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்புக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி  பேசுகையில், பாஜக ஆட்சியில் சமத்து வமின்மை அதிகரித்து வருவதாகவும், இது டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் இலட்சியங்களுக்கு செய்திடும் துரோ கம் என்றும், அவரின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அவற்றை அழித்து ஒழித்திடத் துடிக்கிறது என்றும் கூறினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் பிருந்தா காரத் பேசுகையில் ஆளும்  பாஜகவினர் டாக்டர் பி.ஆர். அம்பேத்  கர் உருவாக்கித்தந்துள்ள அரசமைப்புச் சட்டத்தையே தாக்கிக் கொண்டிருப்ப தாகவும், இவர்கள் தலித்துகள் மீது காட்  டும் அன்பு என்பது பொய்யானது என்றும் கூறினார். பின்னர் ஜனநாட்டிய மஞ்ச் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. (ந.நி.)