முக்கியத் தலைவர்களின் வீடுகளை குறிவைத்து சோதனை
ராய்ப்பூர், பிப். 21 - காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறவிருக்கும் நேரத் தில், சத்தீஸ்கர் காங்கிரஸ் தலை வர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை திட்டமிட்ட அர சியல் பழிவாங்கல் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணு கோபால் குற்றம்சாட்டியுள்ளார். ராய்ப்பூரில் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்த கே.சி. வேணுகோபால், “இந்த சோதனை தெளிவான அர சியல் பழிவாங்கல் ஆகும். இது போன்ற சோதனைகள் நாங்கள் எதிர்பார்த்ததுதான். காங்கிரஸ் மாநாடு அல்லது தேர்தல் எங்கு நடந்தாலும் அமலாக்கத்துறை எப்போதும் வந்துவிடும். இதற்காக நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள். அமலாக்கத் துறை, சிபிஐ என்ற பெயரை சொன்னால் காங்கிரஸ் பயந்து விடும் என்று நினைக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார். சத்தீஸ்கரில் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அந்த மாநிலத்தில் நிலக்கரி எடுத்துச் செல்வோரிடம் ஒரு டன்னு க்கு ரூ. 25 விகிதம், மொத்தம் ரூ. 540 கோடி சட்டவிரோதமாக வசூ லிக்கப்பட்டுள்ளது என்று மோடி அரசின் அமலாக்கத் துறை குற்றச் சாட்டு கூறியுள்ளது.
நிலக்கரி தொழிலுடன் சம்பந்தப் பட்டவா்களிடம் இருந்து மாநி லத்தின் மூத்த அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், இடைத்தரகர் கள் அடங்கிய குழு, இந்தச் சட்டவிரோத பண வசூலில் ஈடுபட்ட தாகவும் அமலாக்கத் துறை தெரி வித்துள்ளது. இந்தக் குழுவில் மாநில முதல்வர் பூபேஷ் பாகேலின் துணைச் செய லராக இருந்த செளம்யா செளரா சியா முக்கிய நபராக செயல்பட்ட தாகவும், அவருக்கு சட்டவிரோத மாக வசூலிக்கப்பட்ட பணத்தில் ரூ. 36 கோடி நேரடியாகப் பரிவர்த்த னை செய்யப்பட்டதாகவும் கூறும் அமலாக்கத்துறை, இதே போல மாநில எம்எல்ஏக்கள், அரசி யல்வாதிகள் உள்ளிட்டோருக்கும் பணம் சென்றுள்ளதாக தெரி விக்கிறது. மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்துள்ள அமலாக்கத் துறை, செளராசியா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், நிலக்கரி தொழிலதிபர் என இதுவரை 9 பேர்களை கைது செய்துள்ளது.
இதனிடையே அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85- ஆவது மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பிப்ரவரி 24, 25, 26 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், நிலக்கரி வழக்கைக் காரணம் காட்டி, சத்தீஸ் கரின் பிலாய் நகரிலுள்ள காங்கிரஸ் எம்எல்ஏ தேவேந்திர யாதவ், ராய்ப்பூரிலுள்ள அக்கட்சியின் மாநில பொருளாளா் ராம்கோபால் வா்மா, மாநில செய்தித்தொடா்பாளா் ஆா்.பி. சிங் என காங்கிரஸ் பிரமுகர்களுக்குச் சொந்தமான பல இடங்களில் மோடி அரசின் அம லாக்கத்துறை திங்களன்று திடீர் சோதனை நடத்தி, அச்சுறுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.