states

img

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு வழக்கில் தில்லி காவல்துறையிடம் உச்ச நீதிமன்றம் விளாசல்

புதுதில்லி, ஜன. 14 - முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய 5 மாதக்கால தாமதம் ஏன்? என்று தில்லி காவல்துறையிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி யெழுப்பி உள்ளனர்.  மேலும், இந்த வழக்கில் இது வரை என்ன நடவடிக்கை எடுத்துள் ளீர்கள், இதுவரை எத்தனை பேரை கைது செய்துள்ளீர்கள்..? எனவும் நீதிபதிகள் கேட்டுள்ளனர். தில்லியில் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘இந்து யுவ வாஹினி’ என்ற நிகழ்ச்சி நடை பெற்றது. சுதர்சன் தொலைக்காட்சி ஆசிரியர் சுரேஷ் சவ்ஹான்கே தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பலரும் பேசினர். இதில் முஸ்லிம் களை நமது சமூகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற ரீதியில் சில இந்து மதத் தலைவர்கள் பேசினர். இந்த பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக ஏராள மானோர் புகார் அளித்தாலும், காவல் துறை பெரிதாக நடவடிக்கை எடுக்க வில்லை. பின்னர் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தில்லி போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், “இந்நிகழ்ச்சியில் சட்டத்துக்கு புறம்பாக யாரும் பேசவில்லை” என போலீசார் தெரிவித்தனர். இந்த பதிலைக் கேட்ட நீதிபதிகள், தில்லி காவல்துறையை கடுமையாக சாடி னர். அதன்பிறகு கடந்த 2022 மே மாதம் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சுமார் 5 மாதங்க ளுக்கு பிறகு தில்லி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்ததை சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றத்தில் சமூக செயற்பாட்டாளரும், மகாத்மா காந்தி யின் பேரனுமான துஷார் காந்தி மனுத் தாக்கல் செய்தார்.  “வெறுப்பூட்டும் பேச்சுகள் மற்றும் படுகொலைகளைத் தடுக்க வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி, இந்த விவகாரத்தில் எந்த நடவ டிக்கையும் எடுக்காத மூத்த காவல் துறை அதிகாரிகள் மீது அவமதிப்பு  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் அவர் வலியுறுத்தினார்.

இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நர சிம்மா அடங்கிய அமர்வு முன்பு  வெள்ளிக்கிழமையன்று விசாரணை க்கு வந்தது. அப்போது, தில்லி போலீ சாரை நோக்கி நீதிபதிகள் சரமாரியாக கேள்வியெழுப்பினர்.  “சம்பவம் நடந்து 5 மாதங்களு க்கு பிறகு எப்ஐஆர் பதிவு செய்தி ருக்கிறீர்களே.. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்” எனக் கேட்டனர். அதற்கு பதிலளித்த தில்லி போலீசார், “நிகழ்ச்சியில் பேசப் பட்ட விஷயங்கள் குறித்து விசாரணை நடத்தியதால் தாமதம் ஏற்பட்டது” எனத் தெரிவித்தனர். அதனைக்கேட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்,  “சரி.. எப்ஐஆர் பதிவு செய்யதான் தாமதம் ஆகிவிட்டது. எப்ஐஆர் பதிவு செய்தே 8 மாதங்கள் ஆகிவிட்டதே இத்தனை மாதங்களில் இந்த வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கி றீர்கள்? எத்தனை பேரை கைது செய்தி ருக்கிறீர்கள்? யார் யாரிடம் விசாரணை நடந்திருக்கிறது? வழக்கில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது?” என மேலும், அடுக்கடுக்கான கேள்விக ளை எழுப்பினர். ஆனால், இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தில்லி போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ் திணறினார். அதன் பிறகு, போலீ சார் மேற்கொண்ட விசாரணை நடவ டிக்கைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதாக அவர் உறுதியளித்தார்.