புதுதில்லி, மார்ச் 9- மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவரு மான ஜகதீப் தன்கர், மரபையும் விதியையும் மீறி மாநிலங்களவை யின் 20 நிலைக்குழுக்களுக்குத் தன் சொந்த ஊழியர்களை மிகவும் உயர்ந்த பதவியில் அமர்த்தியி ருப்பது எதிர்க்கட்சியினரிடையே கோபாவேசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. செவ்வாய்க்கிழமையன்று மாநிலங்களவைச் செயலகம் வெளி யிட்டுள்ள ஆணையில் மாநிலங்க ளவைத் தலைவர் அலுவலகத்திலி ருந்து நான்கு ஊழியர்களும், குடி யரசுத் துணைத் தலைவரின் செய லகத்திலிருந்து நான்கு ஊழியர் களும் நிலைக்குழுக்களுக்கு நிய மனம் செய்யப்பட்டிருக்கிறார் கள். நிலைக் குழுக்களுக்கு இவ் வாறு தனிப்பட்ட சொந்த ஊழியர்கள் இதற்குமுன்னெப்போதும் நிய மனம் செய்யப்பட்டது கிடையாது. ஒவ்வொரு நிலைக்குழுவுக்கும் அதன் செயல்பாட்டிற்கு உதவுவ தற்காக கூடுதல் செயலாளர் அல் லது இணைச் செயலாளர் நிலையி லேயே இதுவரை நியமனம் செய் யப்பட்டிருக்கிறார்கள். மிகவும் இரகசியமாகச் செயல்பட வேண் டிய நிலைக்குழுக் கூட்டங்களில் இவர்கள் அனைவரும் பங்கேற் பார்கள். ஆனால் தற்போது மாநி லங்களவைத் தலைவரின் நியமனம் அத்துமீறலாக உள்ளது. இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மிக வும் கோபாவேசம் அடைந்திருக்கி றார்கள். அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிலைக்குழுவின் தலைவராக வுள்ள காங்கிரஸ் கட்சித் தலைவ ரான ஜெயராம் ரமேஷ், இந்த ஆணையானது “முன்னோடி யில்லாதது மற்றும் விவரிக்க முடி யாததுமாகும்” என்று கூறியிருக்கி றார். இவ்வாறு மாநிலங்களவைத் தலைவர் தன்னிஷ்டத்திற்கு ஆட் களை நியமனம் செய்திருப்பதில் எவ்விதமான விழுமியமும் மதிப்பும் இருப்பதாக தன்னால் பார்க்க முடிய வில்லை என்றும் கூறியிருக்கிறார். நிலைக்குழுக்கள் எவ்விதப் பிரச்சனையுமின்றி செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் இவ்வாறு கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். (ந.நி.)