ஐதராபாத், ஜன.18- இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ள்ள நியூசிலாந்து கிரிக் கெட் அணி ஒருநாள் மற்றும் 20வது ஒவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதரா பாத்தில் புதனன்று(ஜன.18) நடைபெற்றது. பூவா? தலையா? போட்டதில் வென்ற இந்திய அணி முதலில் ஆடத் துவங்கி யது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஷூப்மன் கில், ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்தின் பந்துவீச்சை சிதறடித்தனர். கேப்டன் ரோகித் 34 ரன்களில் வெளி யேறினார். அதன் பிறகு வந்த வீரர்கள் செற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பின்னர் ஷூப்மான் ருத்ரதாண்டவம் ஆடினார். நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய அவர் 145 பந்துகளில் 19 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் தனது முதல் இரட்டை சதத்தை விளாசி னார். தொடர்ந்து ஆடிய அவர் 208 ரன்னில் ஆட்ட மிழந்தார். இதனால் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது.