states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் பாஜக “மொழி அவசர நிலையை” ஏற்படுத்தியுள்ளது. மொழி மூலம் பாஜக நாட்டில் பிளவை உருவாக்க முயற்சிக்கிறது.  மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். சிவசேனா இந்தி மொழியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பை உறுதியாக எதிர்க்கிறது.

ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோஜ் ஜா

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ச்சியாக 18 முறை நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என கூறியுள்ளார். அவரின் மனநிலை ஒரு ரியல் எஸ்டேட் பில்டர் ( கட்டுநர்) போன்றது. அவரின் பேச்சும் அதே மாதிரியானது தான். இந்தியா எப்போதும் தனது சர்வதேச முடிவுகளை சுதந்திரமாக எடுக்கும். ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது குறித்த விவாதங்கள் விரைவில் முடிக்கப்பட வேண்டும். விவாதங்கள் நடக்கட்டும், அது ஒரு நல்ல விஷயம் தான். ஆனால் எப்பொழுது  விவாதங்கள் நிறைவடையும்?

திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி

அடுத்த வருடம் நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக 50 இடங்களை தாண்டாது. கடந்த மக்களவை தேர்தலை போல எனது கணிப்பு இந்த முறையும் சரியாகவே இருக்கும்.