states

img

இது 9 மாத கணக்கு மட்டுமே! ரூ. 49 ஆயிரம் கோடி லாபமீட்டிய பொதுத்துறை வங்கிகள்!

புதுதில்லி, மார்ச் 18- பொதுத்துறை வங்கி கள், கடந்த 9 மாதங்களில் ரூ. 48 ஆயிரத்து 874 கோடி ரூபாய் லாபம் ஈட்டி யிருப்பதாக ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் பொதுத்துறை வங்கிகள் தொடர்பான கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் எழுத்துப்பூர்வமாக பதி லளித்துள்ளார்.  அதில், “அனைத்து பொதுத்துறை வங்கி களும் இந்த 2021-22 நிதியாண்டின் முதல் 9 மாதங் களில் (2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை) மொத்தமாக ரூ. 48 ஆயிரத்து 874 கோடி லாபம் ஈட்டியுள்ளன. கடந்த  3 காலாண்டுகளில் எந்தவொரு பொதுத்துறை வங்கியும் நஷ்டத்தை சந்திக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றொரு கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையில், “கடந்த 2019-20 நிதியாண்டில் நம் நாட்டில் மொத்தம் 8.22 கோடி பேர் வரிசெலுத்துவோராக உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.