states

img

‘பாரத் அரிசி’, மலிவு விலை என பம்மாத்து? ஒரே ஆண்டில் 13 சதவீதம் அதிகரித்த அரிசி விலை!

புதுதில்லி, டிச. 29 - இந்தியாவில், முன் னெப்போதும் இல்லாத வகையில், மோடி ஆட்சியில் ஒரே ஆண்டில் அரிசி விலை 13 சதவிகிதம் அள விற்கு உயர்ந்துள்ளது.  சில்லரை அரிசி விலை யைக் கட்டுக்குள் வைப்ப தற்கான ஒன்றிய உணவு அமைச்சகத்தின் முயற்சி போதிய பலனளிக்க வில்லை என்பதை அந்த  அமைச்சகத்தின் அதிகாரி ஒருவரே ஒப்புக் கொண்டுள் ளார். ஏற்றுமதிக்கு பகுதி யளவு தடைகள், கட்டுப்பாடு களை விதித்தும் ஓராண்டு க்கும் மேலாக அரிசி, கோதுமை போன்றவற்றின் விலையை மோடி அரசால்  கட்டுப்படுத்த முடிய வில்லை. தற்போது அரிசி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அரிசி விலை யேற்றத்தைத் தடுக்கிறோம் என்ற பெயரில், ‘பொதுச் சந்தை விற்பனை திட்டத் தின்கீழ் மின்-ஏலத்தில் இந்திய உணவுக் கழகத்தின் அரிசியை விற்பனை செய்வ தன் மூலம் உள்நாட்டு இருப்பை அதிகரித்து, சில்ல ரை அரிசி விலையைக் கட்டுக்குள் வைக்கும் முயற்சியில் மோடி அரசு இறங்கியது. மேலும், இந்திய உணவுக் கழகத்திடம் கை யிருப்பில் இருக்கும் அரி சியை, சில்லறைச் சந்தை யில் ‘பாரத்’ அரிசி என்ற  பெயரில் மலிவு விலைக்கு விற்கும் ஆலோசனையை யும் மேற்கொண்டது. எனினும் தள்ளுபடி விலை குறித்து மோடி அரசால் உறுதியான முடிவு எதையும் எடுக்க முடியவில்லை. தற்போதைய விலை யான ரூ.29க்கே பாரத் அரி சியை விற்பனை செய்வதா,  அல்லது மேலும் குறைக்கப் பட்ட விலையில் விற்பனை செய்வதா? என்பது குறித்து அமைச்சா்கள் குழுதான் முடிவு செய்யும்; ஆனால், இது இன்னும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு பொதுச் சந்தை விற்பனை திட்டத்தின்கீழ் 3.04 லட்சம் டன் அரிசி மற்றும் 82.89 லட்சம் டன் கோதுமையை இந்திய உணவுக் கழகம் தற்போதுவரை விற்பனை செய்துள்ளது. ஆனாலும், சில்லரை விற்பனைச் சந்தையில் அரிசியின் வருடாந்திர விலையேற்ற விகிதம் 13 சதவிகிதம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்கள் ரேசனில் அரிசியை இலவசமாக வழங்கும்போது, இருப்பி லுள்ள அரிசியை என்ன விலைக்கு விற்பது? என்று மோடி அரசு யோசித்துக் கொண்டிருப்பது, அதற்கு பொதுமக்கள் மீது அக்க றையில்லை என்பதையே காட்டு வதாக குற்றச்சா ட்டுக்கள் எழுந்துள்ளன.