states

img

பில்கிஸ் பானுவின் மறு ஆய்வு மனு தள்ளுபடி

புதுதில்லி, டிச.17- கும்பல் பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலை குற்றங்களில் ஈடுபட்ட  11 பேரை, முன்கூட்டியே சிறையிலி ருந்து விடுதலை செய்வதற்கு குஜ ராத் அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று  2022 மே மாதம் அளித்த தீர்ப்பை மறு  ஆய்வு செய்ய வேண்டும் என்று பில்  கிஸ் பானு தாக்கல் செய்த மனுவை  உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள் ளது. உச்சநீதிமன்றம் முன்னர் அளித்த தீர்ப்பில் பிழை இருப்பதாக தெரிய வில்லை; எனவே, இவ்வழக்கை விசா ரிப்பதற்கு முகாந்திரம் இல்லை என்று நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, விக்ரம் நாத் அமர்வு தெரிவித்துள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு, குஜ ராத் மாநிலத்தில் நரேந்திரமோடி முதல்  வராக இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, இஸ்  லாமியர்களுக்கு எதிராக வன்முறை தூண்டிவிடப்பட்டது. அப்போது அக மதாபாத் அருகிலுள்ள தாகோடு மாவட்  டம் ரன்தீக்பூர் கிராமத்தைச் சேர்ந்த  பில்கிஸ் பானு, 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரையும், அவ ரது தாயார் உள்ளிட்ட மேலும் 4 பெண்  களையும் 2002 மார்ச் 3-ஆம் தேதி கும்  பல் ஒன்று வல்லுறவுக்கு உள்ளாக்கி யது. அத்துடன் பானுவின் 3 வயது பெண்குழந்தை சலேஹாவை பாறை யில் அடித்துக் கொன்ற அந்தக் கும்பல், மொத்தமாக 7 பேரை கொன்று குவித்தது.

இந்த கொடூர சம்பவத்திற்குப் பின்னால், பில்கிஸ் பானு நடத்திய நீண்ட நெடிய சட்டப்போராட்டம் கார ணமாக, 2008-ஆம் ஆண்டு, குற்றவாளி கள் 11 பேருக்கு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் கோத்ரா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், ஜஸ்வந்த்பாய் நாய், கோவிந்த்பாய் நாய், ஷைலேஷ் பட், ராதேஷாம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா,  பிரதீப் மோர்தியா, பகபாய் வோஹா னியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட்  மற்றும்  ரமேஷ் சந்தனா ஆகிய குற்ற வாளிகள் 11 பேரையும், கடந்த ஆகஸ்ட்   15 அன்று சுதந்திர தின பவளவிழா வை முன்னிட்டு குஜராத் பாஜக அரசு  சிறையில் இருந்து விடுதலைசெய்தது.   1992-ஆம் ஆண்டின் குஜராத் மாநில சிறைக்கைதிகள் தண்டனைக் குறைப்பு கொள்கை அடிப்படையில், 11 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுப்பதற்கு குஜ ராத் அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று  2022 மே மாதம் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த  தீர்ப்பின் அடிப்படையிலேயே குற்ற வாளிகளை விடுவித்ததாக மாநில பாஜக அரசு கூறிக்கொண்டது. ஆனால், இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகக் கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு நன்ன டத்தை விதி பொருந்தாது என்று பல ரும் கூறினர். மேலும், குற்றவாளிகளில் ஒருவர் 2020-இல் பரோலில் வெளியே வந்தபோது ஒரு பெண்ணை பாலியல்  துன்புறுத்தல் செய்ததாக அரசின் பிர மாணப் பத்திரமே குறிப்பிடுவதால், நன்னடத்தை எங்கே இருக்கிறது? என்றும் கேள்வி எழுப்பினர்.

பில்கிஸ் பானு வழக்கில் குற்ற வாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, திரிணாமுல் காங்கி ரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, பத்தி ரிக்கையாளர் ரேவதி லால், முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் மீரான் சாதா போர்  வான்கர் உள்ளிட்டோர் உச்ச நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்  தனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவும் குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிராக கடந்த நவம்பர் 30 அன்று உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.  அத்துடன், குற்றவாளிகளை விடு விப்பதற்கு குஜராத் அரசுக்கு அதி காரம் உள்ளது என்று அஜய் ரஸ்தோகி  தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு  2022 மே 13-ஆம் தேதி அளித்த தீர்ப்பை  மறு ஆய்வு செய்யக்கோரியும் மற்  றொரு மனுவைத் தாக்கல் செய்தார்.  பில்கிஸ் பானு தரப்பில் ஆஜரான  வழக்கறிஞர் ஷோபா குப்தா, “அஜய்  ரஸ்தோகி அமர்வு அளித்த தீர்ப்பானது,  சிஆர்பிசி (CrPC)-யின் பிரிவு 432(7) (பி)-இன் தெளிவான விளக்கங்க ளுக்கு முரணானது. பில்கிஸ் பானு தொடர்புடைய வழக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்றதால், குற்ற வாளிகளை விடுதலை செய்யும் அதி காரம் மகாராஷ்டிர அரசுக்கே உள்ளது. குஜராத் உயர் நீதிமன்றமும் இதைத் தான் கூறியிருந்தது. ஆனால், குஜராத்  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அஜய்  ரஸ்தோகி அமர்வு ரத்து செய்துள்ளது.  அரசியலமைப்பின் 32-வது பிரிவின் கீழ் ஒரு தீர்ப்பை ஒதுக்கிவிட முடியாது என்பதால், இது ஒரு கடுமையான நடைமுறை மீறல்.  மேலும், உச்சநீதிமன்றத்தை நாடிய குற்றவாளி, புத்தி சாலித்தனமாக, குஜராத் வன்முறை தொடர்பான வழக்கிலேயே தாங்கள் நிவாரணம் கோருகிறோம் என்பதை மறைத்து விட்டார். பில்கிஸ் பானுவை எதிர்த்  தரப்பாக காட்டவில்லை. அவரது பெயரையும் மறைத்து விட்டார்.

குற்றத்தின் தீவிரமும் இங்கே  கவனத்திற்கு வரவில்லை. இதன்மூலம் நீதிமன்றமே  தவறாக வழிநடத்தப்பட்டு, தீர்ப்பு பெறப்பட்டு உள்ளது. எனவே, இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்று வாதங்களை முன்வைத்திருந்தார். இந்நிலையில், இந்த மறுஆய்வு மனுவை உச்ச  நீதிமன்றம் கடந்த டிசம்பர் 13-ஆம் தேதியே தள்ளுபடி செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.  பில்கிஸ் பானுவின் கோரிக்கை அடிப்படையில், 2022 மே 13-ஆம் தேதியிட்ட தீர்ப்பை மறு ஆய்வதற் கான எவ்வித முகாந்திரமும் இல்லை. மனுதாரர் குறிப்பிட்டுள்ள முன்னுதாரணங்கள் விசாரணைக்கு உரியதாக இல்லை. அத்துடன் தங்களின் தீர்ப்பில் பிழை இருப்பதாக தெரியவில்லை என்று நீதிபதி கள் குறிப்பிட்டுள்ளனர். மனு தள்ளுபடி செய்த தக வலை, உச்ச நீதிமன்ற உதவிப் பதிவாளர் பில்கிஸ்  பானுவின் வழக்கறிஞருக்கு அனுப்பி வைத்துள்ளார். பில்கிஸ் பானுவின் மறு ஆய்வு மனுவை அஜய்  ரஸ்தோகி, பேலா எம். திரிவேதி, விக்ரம் நாத் அமர்வு  விசாரிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், நீதிபதி பேலா  எம். திரிவேதி கடந்த வாரம் வழக்கிலிருந்து விலகிக்  கொண்டார். இதனால் பில்கிஸ் பானுவின் மனு மீது,  அஜய் ரஸ்தோகி, விக்ரம் நாத் ஆகியோர் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.