புதுச்சேரி, நவ.14- இந்திய குடியரசு என்கிற அமிர் தத்தை ஆர்எஸ்எஸ்-பாஜகவிடமி ருந்து பாதுகாக்க ஒன்று பட்ட போராட்டங் களை தீவிரப்படுத்த வேண்டும் என்று சீத்தாராம்யெச்சூரி வேண்டுகோள் விடுத்தார். மக்கள் நலனை பாதுகாத்திட மாநில உரிமை மீட்பு அரசியல் சிறப்பு மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் புதுச்சேரியில் நடைபெற்றது. புதுவை சப்தர்ஹஸ்மி கலைக்குழுவின் கிரா மியப் பாடல்களோடு துவங்கிய மாநாட் டிற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார். மாநாட்டுப் பிரகடனத்தை வெளியிட்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செய லாளர் சீத்தாராம்யெச்சூரி பேசினார். அவரது உரையின் சுருக்கம் வரு மாறு:- புதுச்சேரியில் இரட்டை எஞ்சின் ஆட்சி நடைபெறுவதாக கூறினார்கள். இரட்டை எஞ்சின் ஆட்சி என்பது ஒன்றி யத்திலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி. அத்தகைய ஆட்சியால் புதுச்சேரி மாநி லம் வளர்ச்சியை நோக்கிச் சென்றிருக்க வேண்டும். ஆனால், புதுவை மாநிலம் வளர்ச்சிபெறவில்லை. மாநிலங்களின் வளர்ச்சி குறித்து ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சமீபத்தில் வெளி யிட்ட ஆய்வு அறிக்கையில், உத்தரப்பிர தேச மாநிலம் சமூக வளர்ச்சியில் பின் னுக்குச் சென்றுள்ளது என்று தெரிவித் துள்ளது. அங்கும் பாஜகதான் ஆட்சி யில் இருக்கிறது. புதுவையைபோன்று ஒன்றியத்திலும் மாநிலத்திலும் இரட்டை இஞ்சின் ஆட்சியே நடக்கிறது. இந்த இரண்டு மாநிலங்கள் மட்டு மல்ல, வடகிழக்கு மாநிலங்களின் நிலை மையும் படுமோசமாகவே உள்ளது. நாட்டில் உள்ள 22 மாநில மொழிகள் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட் டுள்ளன. ஆனால் மாநில மொழிகளை பின்னுக்குத் தள்ளும் வகையில் இந்தி என்ற ஒற்றைமொழியை ஆட்சிமொழி யாக்க பாஜக துடித்து வருகிறது.
போட்டி அரசாங்கம்
எதிர்க்கட்சிகள் ஆட்சிசெய்யக் கூடிய மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் போட்டி அரசாங்கங்களை ஒன் றிய பாஜக நடத்தி வருகிறது. இப்படித் தான் தமிழகம், கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களின் வளர்ச்சியை சீர் குலைக்கும் வேலையை மோடி அரசு செய்து வருகிறது. போட்டி அரசியலை நடத்தி வரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாநில அந்தஸ்து குறித்து பேசுவது இல்லை ஏன்? மாநில மக்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்தோ, மாநிலங்களின் வளர்ச்சிகள் குறித்தோ ஆளுநர் களுக்கு அக்கறையில்லை. எதிர்க்கட்சி கள் ஆட்சி செய்து வரும் மாநிலங்களின் அதிகாரங்களை முழுமையாகப் பறித்து ஒன்றிய ஆட்சியின் கட்டுப்பாட் டிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே தற்போதைய ஆளுநர்களின் விருப்பமாக இருக்கிறது.
இந்து ராஷ்டிராவை அமைக்க வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கத்தை நிறை வேற்றும் பணியில் வேகவேகமாக ஈடு பட்டு வருகிறது மோடி அரசு. இதற்கு தடையாக இருப்பது அரசியல் சாசனம். எனவே, அரசியல் சாசனத்தில் உறு திப்படுத்தப்பட்ட மதச்சார்பின்மை, ஜன நாயகம், சமூகநீதி, பொருளாதார சுதந் திரம், கூட்டாட்சித் தத்துவம் ஆகிய தூண்களை சிதைப்பதற்கான வேலை களையும் செய்து வருகிறது. இதனை நாட்டு மக்களும் நம்மைப் போன்ற அர சியல் கட்சிகளும் ஒருபோதும் அனு மதிக்கக்கூடாது. நமது நாட்டின் அரசியல் சாசனம் என்பது சோசலிசத்தை நோக்கித் தான் செல்ல வேண்டுமே தவிர, பின் னோக்கிச் செல்லக்கூடாது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஒருகுழு அமைக்க வேண்டும் என்று உத்தர விட்டது. ஆனால் கோவில் கட்டும் பணி யில் பிரதமர் மோடிதான் முதல் நபராக உள்ளார்.
இதேபோல் தான் காசி விசுவ நாதர் கோவில் புனரமைப்புப் பணி களை மேற்கொள்ளவும் முதல் நப ராக பிரதமர் இருப்பது இந்திய மதச் சார்பின்மைக்கு எதிரானதாகும். அதைப்பற்றி சிறிதும் கவலைக்கொள ளாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கட்ட ளையை நிறைவேற்றும் முதல் நபராக உள்ளார் பிரதமர்மோடி. இதன் மூலம் சிறுபான்மை மக்களிடையே பாஜக அச் சத்தை உருவாக்கி வருகிறது. நமது நாட்டின் குடியரசு என்ற அமிர்தத்தை பிடுங்கிக்கொண்டு ஓடப் பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ்., பாஜக. ஆனால், அந்த கொடியவர்களிடம் இருந்து அமிர்தம் என்ற இந்திய குடி யரசை பாதுகாக்க நாம் பரந்த மேடை அமைத்து மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இந்துத்துவா கொள்கையின் சோத னைக் கூடமாக புதுச்சேரியை மாற்றி, அதன்மூலம் தென்னிந்தியாவில் ஊடு ருவ பாஜக முயற்சிக்கிறது. அதனை முறியடித்து மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தி புதுச்சேரியின் பண் பாட்டையும், தனித்துவத்தையும் பாது காக்க வேண்டும். இவ்வாறு யெச்சூரி பேசினார். அவரது உரையை அன்வர் உசேன் மொழியாக்கம் செய்தார்.