டேராடூன், மார்ச் 25 - உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த, அமைச் சரவையின் ஒப்புதல் பெறப்பட்டுவிட்ட தாக, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். உத்தரகண்ட் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அத்துடன் எம்எல்ஏ கூட ஆகமுடியாவிட்டாலும், தோற்றுப் போன புஷ்கர் சிங் தாமி யையே மீண்டும் முதல்வர் ஆக்கி யுள்ளது. இதனைத் தொடர்ந்து, வியாழனன்று முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ள உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். ஒரு நிபுணர்கள் குழு விரைவில் அமைக்கப்பட்டு மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை செயல்படுத்த மாநில அமைச்சரவை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அவ்வாறு செய்யும் முதல் மாநிலமாக உத்தரகண்ட் இருக்கும்” என்று தெரி வித்துள்ளார்.