states

img

ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு

ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு

புதுதில்லி  சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முதல் கட்ட பொ துத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் எனவும் 2 ஆவது கட்ட பொதுத் தேர்வு கட்டாயமல்ல; அதை எழுதுவதும் தவிர்ப்பதும் மாணவர்கள் விருப்பம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உள்மதிப் பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும். முதல்கட்ட பொதுத்தேர்வுகளின் முடிவு ஏப்ரல் மாதமும், 2 ஆவது கட்ட பொ துத்தேர்வு முடிவு ஜூன் மாதமும் வெளியிடப் படும் எனவும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.