ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு
புதுதில்லி சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முதல் கட்ட பொ துத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் எனவும் 2 ஆவது கட்ட பொதுத் தேர்வு கட்டாயமல்ல; அதை எழுதுவதும் தவிர்ப்பதும் மாணவர்கள் விருப்பம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உள்மதிப் பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும். முதல்கட்ட பொதுத்தேர்வுகளின் முடிவு ஏப்ரல் மாதமும், 2 ஆவது கட்ட பொ துத்தேர்வு முடிவு ஜூன் மாதமும் வெளியிடப் படும் எனவும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.