ஸ்ரீநகர், மார்ச் 24 - ஜம்மு - காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 மீண்டும் அமல்படுத்தப் படும் வரை நான் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாய கக் கட்சித் தலைவருமான மெக பூபா முப்தி கூறியுள்ளார். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: “நான் இதுவரை சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றபோது எல்லாம், ஜம்மு - காஷ்மீர் சட்டம், இந்தியச் சட்டம் இரண்டையும் கொண்டு, இரண்டு கொடி களுடன் பதவியேற்றுள்ளேன். ஆனால், ஜம்மு - காஷ்மீரில் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்தச் சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்தும் வரை, நான் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. நான் தற்போது எடுத்துள்ள இந்த முடிவு முட்டாள்தன மாக இருக்கலாம். ஆனால் எனக்கு உணர்ச்சிகரமான விஷயமாகும். ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் நடத்த தயார் எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால், பாஜக தனக்கு சாதகமான நேரம் வரும்போதுதான் தேர்தலை அறிவித்து நடத்தும். அதேநேரம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போதைக்கு தன்னால் கூற முடியாது. இவ்வாறு மெகபூபா முப்தி கூறியுள்ளார்.
பல்வேறு வடகிழக்கு மாநிலங்களுக்கு வழங்கப்படு வதைப் போல, ஜம்மு - காஷ்மீருக்கும் சிறப்பு உரிமைகள் வழங்கும் வகையில், பிரிவு 370- இருந்து வந்தது. இதனை, 2019-இல் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி அரசு நீக்கியது. ஜம்மு - காஷ்மீரின் மாநில அந்தஸ்தை பறித்ததுடன், லடாக்கை பிரித்து தனி யூனியன் பிரதேசமாக அறிவித்தது. ஜம்மு - காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக அறிவித்தது. இதன்பிறகு சுமார் 4 ஆண்டு களாக ஜம்மு - காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தாமல், ஒன்றிய அரசின் மூலம் மறைமுகமாக பாஜக ஆட்சியை நடத்தி வருகிறது.