திருவனந்தபுரம் மக்களின் பிரதிநிதியாக ஏற்கனவே நாடாளுமன்றத்தில் செயல்பட்டுள்ளவர் இடது ஜனநாயக முன்னணி வட்பாளர் பன்னியன் ரவீந்திரன். பெரும் கோடீஸ்வர யூடிஎப், என்டிஏ வேட் பாளர்களை எதிர் கொண்டு முன்னேறி வருகிறார். நேமம் தொகு திக்கான சுற்றுப்பய ணத்தை அமைச்சர் வி.சிவன்குட்டி தொடங்கி வைத்து பேசுகை யில், திருவனந்தபுரம் தொகுதியின் வளர்ச் சிக்கு சசி தரூர் என்ன செய்தார்?. மக்கள் பிரச்ச னைகளில் சசி தரூர் தலையிட்டதைக் கூட சுட்டிக்காட்ட முடியாது. ராஜீவ் சந்திரசேகர் மத்திய அமைச்சராக உள்ளார். கேரளத்திற்கு குறிப்பாக திருவனந்தபுரத்திற்கு என்ன திட்டத்தை ராஜீவ் சந்திரசேகர் கொண்டு வந் துள்ளார். ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கேரளத்தின் வளர்ச்சியை குழி தோண்டிப் புதைக்கவே முயற்சித்துள்ளனர். கோடீஸ்வரர்களான சசி தரூரும் ராஜீவ் சந்திர சேகரும் சாமானியர்களுக்கு எட்டாதவர்கள். தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துபவர் மக்களை அணுகக்கூடியவராக இருக்க வேண்டும். பன்னியன் ரவீந்திரன் எப்போதும் சாமானிய மக்களுடன் நெருங்கிப் பழகும் தலைவர். பன்னியன் ரவீந்திரன் திருவனந்த புரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது ஒன்றிய அரசின் நிதி மூலம் தொகுதி யில் பல திட்டங்களை கொண்டு வந்தார். திரு வனந்தபுரம் தொகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இந்த வரலாற்றைக் கொண்ட பன்னியன் ரவீந்திரனின் வெற்றி இன்றியமை யாதது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.