states

ஊடகவியலாளர்களை வேட்டையாடும் மம்தா பானர்ஜி அரசு

தில்லி பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்

புதுதில்லி, ஜன.20-  மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள் உள்ளாட்சி அமைப்பு களால் வேட்டையாடப்படும் போக்கு அதிகரித்து வருவதற்கு, பத்திரிகையாளர் தேசியக் கூட்டணி  (NAJ - National Alliance of Journalistsயும், தில்லி பத்திரிகையாளர்கள் சங்கமும் (DUJ-Delhi Union of Journalists) கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இவ்வாறு வேட்டையாடப்படும் ஊடகவிய லாளர்கள் சிறிய அளவிலான உள்ளூர் நாளேடு களிலும், தொலைக்காட்சி அலைவரிசை களிலும் பணிபுரிந்து வந்ததால் இவர்கள் மீதான தாக்குதல்கள் தேசிய ஊடகங்களால் அநேகமாகக் கண்டுகொள்ளப் படவில்லை. இதுகுறித்து தில்லி பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.கே. பாந்தே, பொதுச் செயலாளர் சுஜாதா மாதோக் மற்றும் பத்திரிகையாளர் தேசியக் கூட்டணியின் செயலர் நாயகம் (செக்ரடரி ஜெனரல்) என்.கொண்டையா ஆகியோர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மேற்கு வங்கம் நாடியா மாவட்டத்தில் தண்ணீர் குழாய்கள் இணைப்புக்காக நகராட்சி ஊழியர்கள் மூவாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக செய்தி வெளியிட்டதற்காக எட்டு பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டி ருப்பதாகச் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். மேலும் அவர்கள், இதற்காக இந்த பத்திரிகை யாளர்கள்  மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 506 (குற்றமுறு மிரட்டல்), 186 (பொதுப்பணி களைப் பொது ஊழியர் ஆற்றிவரும்போது அவரைத் தடுத்தல்) மற்றும் 120-பி (குற்ற முறு சதி) உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் காவல் துறையினரால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டி ருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இவ்வாறு வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ள ஊடகவியலாளர்கள், சௌவிக் பானர்ஜி, (ஆசிரியர், ஜனதார் சித்தி), லோகேஷ் தேவ்நாத்,(நிருபர், சிஎம் பங்க்ளா), ஹிமன் கோகர் பட்டாச்சார்யா, (ஆசிரியர், புரோடான் முக்திதூத்), நிலாய் பட்டாச்சார்யா, (தார் நியூஸ் மாவட்ட நிருபர்), பிரசன்ஜித் சௌத்ரி (சிஎன் நியூஸ்), சுப்ரதா சென் (புகைப்பட நிருபர், சிஎம் பங்க்ளா), அமித் சென் குப்தா, (சிஎம் பங்க்ளா), மகாதேவ் குண்டு, (மாவட்ட நிருபர், டிவி-9 பங்க்ளா) ஆகியோர் ஆவர்.     மேற்கு வங்க அரசு, ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஊடகவியலாளர்கள் மீது இத்தகைய மிரட்டும் உத்திகளைக் கையாண்டு வருகிறது என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அற்பக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி ஊடக வியலாளர்களுக்கு எதிராக இவ்வாறு நட வடிக்கைகள் எடுத்திருப்பதை உடனடி யாகக் கைவிட வேண்டும் என்றும், மாநில  அரசாங்கமும், காவல்துறையும் ஊடகவிய லாளர்களை துன்புறுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.       (ஐஎன்என்)