சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு
குற்றாலம்,ஏப்.17- ஆட்டோ தொழிலை முற்றாக ஒழிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகனச்சட்ட திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி ஏப்ரல் 18 அன்று தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்கு வரத்து அலுவலகங்களை சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகை யிடும் போராட்டத்தை நடத்தவுள்ளனர். தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேள னத்தின் (சிஐடியு) மாநிலக்குழு கூட்டம் ஏப்ரல் 8,9 ஆகிய தேதிகளில் குற்றாலத்தில் சம்மேளன தலைவர் வி. குமார் தலைமையில் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆட்டோ உள்ளிட்ட மோட்டார் தொழிலை நிர்மூலமாக்கும் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தில் ஆட்டோ தொழிலாளர் களுக்கு ஏற்படும் ஆபத்துகள்குறித்து தொடர்ந்து சம்மேளனம் பல்வேறு போராட்டங் களை நடத்தி வந்துள்ளது. இச்சட்டத்திருத்த த்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இரண்டாண்டுகள் கொரோனா பாதிப்பால் ஆட்டோ தொழிலாளர்கள் வருமானம் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மோட்டார் வாகன சட்ட திருத்தம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பா னது மிகப்பெரிய அதிர்ச்சியை ஆட்டோ தொழிலாளிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இச்சட்டம் அமலுக்கு வருவதால் எப்சி எடுக்க ஒருநாள் தவறினால் கூட 50 ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும். ஆண்டு ஒன்றுக்கு எப்சி எடுக்காத ஆட்டோ ரூ.25 ஆயிரம் வரை அபராதம் செலுத்தவேண்டும்.
எப்சி கட்டணமாக 5000 செலுத்த வேண்டும். புகை செக்கப் இல்லையென்றால் ரூ.10 ஆயிரம் அபராதமாக செலுத்த வேண்டும், சிறிய விபத்து எதிர்பாராமல் ஏற்பட்டாலும் கூட அபராதம் செலுத்துவதோடு, ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும். சிறைத்தண்டனையும் அனு பவிக்க வேண்டும் என்ற உத்தரவுகள் ஆட்டோ தொழிலையே முற்றாக அழித்துவிடும். மேலும் தற்போது ஆன்லைன் அபராதம் முறை யும் இந்த மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் ஒரு பகுதிதான் என்பதை ஆட்டோ தொழி லாளர் சம்மேளனம் சுட்டிக்காட்டவிரும்புகிறது. எனவே இந்திய அரசாங்கம் கொண்டு வந்திருக்கிற மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்று தமிழக அரசுக்கு வலியுறுத்து கிறோம். கேரளாவைப் போல் தமிழகத்திலும் மோட்டார் வாகனசட்டத் திருத்தத்தை நிறுத்திவைக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி ஏப்ரல் 18 அன்று தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். ஏப்ரல் 12 அன்று போக்கு வரத்து ஆணையர், மற்றும் தலைமைச் செய லகத்தில் அதிகாரிகளை சந்தித்து மனு அளிப்பது என்றும் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் 9 ஆவது மாநில மாநாட்டை திருவாரூரில் ஜூன் 10,11 ஆகிய தேதிகளில் நடத்துவது என்றும் ஜூன் 10 அன்று 5 ஆயிரம் ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்கும் காக்கிச்சட்டை பேரணி நடத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது.