states

வட கிழக்கு மாநிலங்களில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு

அகர்தலா, மே 1- வட கிழக்கு மாநிலங்களில் இந்தி  திணிப்பு முயற்சிக்கு எதிர்ப்புஎழுந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, ஒரே நாடு,ஒரே  மொழி, ஒரே கலாச்சாரம் என்று கூறிக் கொண்டு, இந்தியாவின் பன்முகத்தன்மை யை சிதைத்து வருவதாக அரசியல் கட்சி  தலைவர்களும் மக்களும் கண்டனம் தெரி வித்து வருகின்றனர். இந்தியை திணிக்கும் வகையில் ஒன்றிய அமைச்சர்களின் பேச்சுக்கள் மற்றும் அரசின் நடவடிக்கைக்கு தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  இந்நிலையில் வடகிழக்கு மாநி லங்களில் 10 ஆம் வகுப்பு வரை இந்தியை கட்டாய பாடம் ஆக்குவதற்கான நட வடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது.   இதை ஆர்.எஸ்.கே.சி. என்று அழைக்கப்படுகிற திரிபுராவில் பிரபல மான 56 பழங்குடி சமூக  கலாச்சார அமைப்புகளின் சம்மேளனம் கடுமையாக எதிர்த்துள்ளது.  இந்த அமைப்பின் தலைவர் பிகாஷ்  ராய் டெபர்மா, அகர்தலாவில் செய்தி யாளர்களிடம் கூறுகையில்,  வட கிழக்கு மாநிலங்களில் குறிப்பாக திரிபுராவில் இந்தியையும், தேவநாகரியையும் வலுக் கட்டாயமாக திணிப்பதை கடுமையாக எதிர்க் கிறோம். மொழி என்பது மாநில பட்டியலில் உள்ளது. அப்படி இருக்கும்போது இந்தியை  வட கிழக்கில் கட்டாயம் ஆக்குவது, அரசியல் சாசனத்தில் இருந்து அப்பட்டமாக  விலகிச்செல்வதைத் தவிர வேறில்லை.ஒன்றிய அரசு, தேவநாகரியை அவர்களின் விருப்பத்துக்கோ, விருப்பத்துக்கு எதிராகவோ எந்த மொழியினருக்கும் உத்தரவிடவோ, திணிக்கவோ முடியாது. மொழியைத் தேர்வு செய்யும் உரிமை என்பது அரசியல் சாசனத்தின் உத்தர வாதம். அதைப்பறிக்க முடியாது” என்று தெரிவித்தார்.