states

ரிஜிஜூ கடிதத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

சுதந்திரமான நீதித்துறைக்கு விஷ மாத்திரை கொடுப்பதாகி விடும் என எச்சரிக்கை

புதுதில்லி, ஜன.17- நீதிபதிகளைத் தேர்வு செய்யும் கொலீஜியம் குழுவில் ஒன்றிய அரசின்  பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உச்ச நீதிமன்ற தலைமை நீதி பதி டி.ஒய். சந்திரசூட்டிற்கு கடிதம்  எழுதியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி யுள்ளது. ஒன்றிய அரசின் இந்த விபரீத  முயற்சி, ‘சுதந்திரமான நீதித்துறைக்கு விஷ மாத்திரை’ கொடுப்பது போன்ற தாகி விடும் என்று எதிர்க்கட்சிகள் கடு மையாக விமர்சித்துள்ளன. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதி பதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பே, உச்ச நீதிமன்ற - உயர் நீதிமன்ற நீதிபதி கள் நியமனத்திற்கான பரிந்துரை களை வழங்கி வருகிறது. இந்த பரிந்து ரைகளை ஏற்று ஒன்றிய அரசு நீதிபதி களின் நியமனத்திற்கு ஒப்புதல் வழங் கும். ஆனால், மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, சமீபகாலமாக, கொலீஜியம் பரிந்துரைகளுக்கு ஒப்பு தல் அளிக்காமல், அவற்றை காலதாம தப்படுத்தி வருகிறது. உச்ச நீதிமன்றத்து டன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. 

அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய சட்டத்துறை அமைச்சர் கிரண்  ரிஜிஜூ, “கொலீஜியம் முறை திருப்தி கரமாக இல்லை என நாட்டு மக்கள் கருதுகின்றனர்; அரசமைப்புச் சட்டக்  கூறுகளின்படி, நீதிபதிகளை நியமிப்  பது அரசின் பணியே ஆகும். உலகம் முழுவதும் அரசுதான் நீதிபதிகளை நிய மித்து வருகிறது” என்று தெரிவித்தது டன், “கொலீஜியம் அமைப்புக்கு ஒரு  முடிவு கட்டும் வகையில், “நீதிபதிகள்  நியமனங்களுக்கான புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதிபதிகளின் காலி யிடங்கள் மற்றும் நியமனங்கள் இப்ப டியே தொடரும்” என்றும் ஆணவத்து டன் கூறினார். கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி, குடிய ரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்க ரும், “முறையான சட்டப்பூர்வ அரசிய லமைப்பு (தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை -National Judicial Appointments Commission - NJAC)  உத்தரவை நீதித்துறை ரத்து செய்தது ஜனநாயக வரலாற்றில் இதுவரை நடந்  திராத சம்பவம்” என்றார். மாநிலங்கள வைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மறுநாளே இவ்வாறு தன்கர் பேசியது விவாதத்தைக் கிளப்பியது. அப்போது, “நீதிபதிகளை நியம னம் செய்யும் கொலீஜியம் நடைமுறை  என்பது இந்த நாட்டின் சட்டம். அதற்கு அனைத்துத் தரப்பினரும் கட்டுப்பட வேண்டும். அந்த வகை கொலீஜியம் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்”  என்று உச்சநீதிமன்றம் காட்டமாக கூறி யது. ஆனாலும் மோடி அரசு அதைக் கேட்பதாக இல்லை

ஜனவரி 11 அன்று மீண்டும் இவ்விவ காரம் குறித்து தன்கர் பேசினார். இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி யையும் திருத்துவதற்கு நாடாளு மன்றத்திற்கு அதிகாரம் இருந்தாலும், அரசியலமைப்பின் அடிப்படைக் கட்ட மைப்பை மாற்றவோ அல்லது அழிக்  கவோ இந்த அதிகாரத்தைப் பயன் படுத்த முடியாது” என்று கடந்த 1973-ஆம் ஆண்டு, கேசவானந்த பாரதி வழக்  கில் உச்சநீதிமன்றம் அளித்த வர லாற்றுத் தீர்ப்பை விமர்சித்தார். “இந்த  தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துள்ளது. அரசியலமைப்பை திருத்தும் நாடாளுமன்றத்தின் அதி காரத்தை யாரேனும் கேள்வி எழுப்பி னால், நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கி றோம்” எனச் சொல்வது கடினமாக போய்விடும்” என்று அவர் கூறினார். ஆனால், அன்றைய தினமே, 7 நீதி பதிகள், 2 வழக்கறிஞர்கள் உள்பட 9 பேரை கர்நாடகம், மும்பை, கவுகாத்தி உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களின் நீதி பதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீ ஜியம் பரிந்துரை செய்தது. இதையடுத்து, புதிய நீதிபதிகள் பரிந்துரை தொடர்பாக ஒன்றிய அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது? என்ற  எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் டிற்கு கடிதம் எழுதிய ஒன்றிய அமைச்  சர் கிரண் ரிஜிஜு, ‘நீதிபதிகள் நிய மனத்துக்கான தேர்வில் பொறுப்பேற் றல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக உச்சநீதி மன்ற மற்றும் உயர்நீதிமன்றங்களின் கொலீஜியங்களில் முறையே ஒன்றிய, மாநில அரசுகளின் பிரதிநிதிகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும்” என்று  வலியுறுத்தினார்.  ரிஜிஜூவின் இந்த கூற்றுக்கு அரசி யல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்ட  னம் தெரிவித்துள்ளனர்.  ‘ஒன்றிய அரசின் பரிந்துரை மிக வும் அபாயகரமானது. நீதிபதிகள் நிய மனத்தில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது’ என்று தில்லி முதல்வர் அர விந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்  கத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘நீதிமன் றங்களைக் கைப்பற்றும் நோக்கில் நீதித்  துறையையே ஒன்றிய அரசு மிரட்டு கிறது’ என்று காங்கிரஸ் கட்சி குற்றம்  சாட்டியுள்ளது.

“தேசிய நீதிபதிகள் நியமன ஆணை யச் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து  செய்தது குறித்து குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் கருத்து, ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு வின் கடும் விமர்சனம் ஆகிய அனைத்  தும் நீதித்துறையை மிரட்டி, அதன் பிறகு அதனை முழுமையாக ஒன்றிய அரசு கைப்பற்றும் நடவடிக்கையாகும்” என்று கூறிய காங்கிரஸ் பொதுச் செய லாளர் ஜெய்ராம் ரமேஷ், கொலீஜி யம் நடைமுறையில் சீர்திருத்தம் மேற்  கொள்ளப்பட வேண்டியது அவசி யம்தான். ஆனால், ஒன்றிய அரசு அதனை  முழுமையாக அடிபணிய வைக்க முயற்சிக்கிறது. பிரச்சனைக்கு ஒன்றிய  அரசு அளிக்கும் பரிகாரம், நீதித் துறைக்கு விஷ மருந்து கொடுப்பதாக ஆகிவிடும்’ என்று குறிப்பிட்டார். இதேபோல ராஷ்ட்ரிய ஜனதா தளம் மூத்த தலைவரும், எம்.பி.யுமான மனோஜ் குமார் ஷா வெளியிட்ட கண்டனத்தில், “ரிஜிஜூ-வின் கூற்று முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது. இது நீதித்துறையின் சுதந்திரம் என்ற எண் ணத்தை, அரசியலமைப்பின் மூலம் எதிர்பார்க்கப்படும் சமநிலையை சீர்  குலைக்கிறது” என்று விமர்சித்துள் ளார். இதையடுத்து, ‘உச்சநீதிமன்ற மற்  றும் உயர்நீதிமன்றங்களின் கொலீஜி யங்களில் ஒன்றிய அரசுப் பிரதிநிதி யை சேர்க்க வேண்டும் என்று ஒன்றிய  அரசு சார்பில் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது, தேசிய நீதிபதிகள் நியமன ஆணை யச் சட்டத்தை ரத்து செய்து உச்சநீதி மன்றம் மேற்கொண்ட நடவடிக்கை யின் பின்னணியில் சரியான நடவ டிக்கையே’ என்று ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம ளித்துள்ளார்.