states

இந்தியாவில் 200 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

புதுதில்லி, டிச.21- நாடு முழுவதும் ஒமைக்ரான் கொரோனா தொற்றால் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள் ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான்  வகை தொற்று வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பய ணிகள் மூலம் இந்தியாவிலும் பரவத் தொடங்கி யுள்ளது. இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை செவ்வா யன்று வெளியிட்ட அறிவிப்பில், ஒமைக்ரான் வகை தொற்றால் இந்தியாவில் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 77 பேர் தொற்றி லிருந்து குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 123 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 54, தில்லி யில் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தெலுங்கானா 20, கர்நாடகம் 19, ராஜஸ்தான் 18, கேரளம் 15, குஜராத் 14, உத்தரப் பிரதேசம் 2, ஆந்திரம், சண்டிகர், தமிழகம், மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

;