ராணுவத்தை சங்கடத்திற்கு உள்ளாக்குவதும்,பின்வாங்கச் செய்வதும் மோடி அரசின் வாடிக்கையான செயலாக மாறிவிட்டது. டசால்ட் நிறுவனத்தின் ரபேல் ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்காக முந்தைய ஐ.மு.கூ. அரசு கவனமாக மேற்கொண்டுவந்த கொள்முதல் நடைமுறைகளை 2014இல் ஆட்சியில் அமர்ந்த மோடியின் அரசு முற்றிலுமாக புறக்கணித்தது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது என்பது ஐ.மு.கூ. அரசு மேற்கொள்ளவிருந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்தது .ஆனால் 2015ல் மோடியின் அரசு அதை ரத்து செய்தது. 126 போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு பதிலாக மோடியின் அரசு ஒப்பந்தத்தை மாற்றி வெறும் 36 ரபேல் விமானங்களை வாங்குவதென்று ஒப்பந்தம் செய்தது. மூத்த விமானப்படை அதிகாரிகள், அரசின் இம்முடிவுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் பேசி மோடியின் அரசைப் பாதுகாத்தனர். உச்ச நீதிமன்றமும் விமானப்படை அதிகாரிகளின் சாட்சியங்களின் பின்னால் ஒளிந்து கொண்டு உண்மையை மறைத்தது.