states

img

இருசக்கர வாகனத்தில் செல்லும் குழந்தைகளுக்கு விலக்கு இல்லை என அறிவிப்பு

புதுதில்லி, ஜுன் 6- இரு சக்கர வாகனங்களில் மூன்றா வது பயணியாக சிறு குழந்தைகளை கூட அனுமதிக்க முடியாது என ஒன்றிய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார். தற்போதுள்ள விதிகளில் திருத்தம் செய்து பத்து வயது வரையிலான குழந்தைகளை பெற்றோருடன் பய ணிக்க அனுமதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை கட்சித் தலைவர் எளமரம் கரீம் எம்.பி அனுப்பிய கடி தத்துக்கு பதிலளித்து ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை அமைச்சர் தெரி வித்துள்ளார். ஒன்றிய மோட்டார் வாகனச் சட்டத்தின் 128 ஆவது பிரிவின்படி, இரு  சக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணிக்க அனுமதி உண்டு. தற்போ தைய விதியின்படி, சிறு குழந்தைகள் கூட தங்கள் பெற்றோருடன் ஹெல்மெட் அணிந்து பயணிப்பது சட்டத்தை மீறுவதாகவும், அபராதம் விதிக்கப்பட வேண்டியதாகவும் உள்ளது.

இந்த விதியால் லட்சக்கணக்கான சாதாரண குடும்பங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இது கேரளா உட்பட பல விவாதங்களுக்கும் எதிர்ப்பு களுக்கும் வழிவகுத்தது. இந்த நிலையில்தான் சட்டத்தில் திருத்தம் செய்து குழந்தைகளை பய ணிக்க அனுமதிக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என தளர்வு கோரி மாநில அரசு அனுப்பிய கடிதத்திற்கு ஒன்றிய அரசு இன்னும் பதிலளிக்க வில்லை. தற்போது, 12 வயதுக்குட்பட்ட குழந்தை பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றால்கூட அபராதம் விதிக்கக்கூடாது என மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், கேரளாவின் இந்த முடி வை ஏற்க ஒன்றிய அரசு முன்வர வில்லை. ஒரு வாகனத்தின் இருக்கை திறனை, அதில் கிடைக்கும் வசதி, அது சுமக்கக்கூடிய அதிகபட்ச எடை, வாகனம் மற்றும் அதன் பயணிகளின் பாதுகாப்பு போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. இதன் அடிப்ப டையில் இரண்டு பேர் மட்டுமே பய ணிக்கும் வகையில் இரு சக்கர  வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. உலகில் எங்கும் இரு சக்கர வாக னங்களில் இருவர் மட்டுமே பயணிக்க  அனுமதி உண்டு. எனவே, தற்போதைய சட்டத்தில் திருத்தம் செய்யவோ அல்லது மூன்றாவது பயணிகளாக குழந்தைகளை அனுமதிக்கவோ முடியாது என அமைச்சர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.