புதுதில்லி, செப்.16- குறிப்பிட்ட தொழில்களை குறிப் பிட்ட வருணத்தவர் (பிரிவினர்) மட் டுமே செய்ய வேண்டும்; அதுவே பகவான் கிருஷ்ணர் வகுத்தளித்த நீதி; அதனை அவரே நினைத்தாலும் மாற்ற முடியாது என்று சனாதனம் கூறு கிறது. தொழில்களை மட்டுமல்லாது, அந்த தொழில்களின் அடிப்படையில், சாதியையும், ஏற்றத்தாழ்வையும், தீண்டாமையையும் அது புகுத்தியது. ஆயிரமாண்டுகளுக்கு மேலாக இருந்த இந்த அநீதி, சில பத்தாண்டு களாகவே கேள்விக்கு உள்ளாக்கப் பட்டு, எந்த சாதியில் பிறந்தாலும், அவ ரவர் விரும்புகிற தொழிலைச் செய்ய லாம்; விவசாயி மகனும் விஞ்ஞானியா கலாம்; தச்சர் மகனும் டாக்டர் ஆக லாம்; குயவர் மகனும் பொறியியலா ளர் ஆகலாம் என்ற நிலை ஏற்படுத்தப் பட்டது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையான்’ என்ற வள்ளுவரின் குறள் அரியணையில் ஏற்றப்பட்டது. ஆனால், நரேந்திர மோடி தலை மையிலான ஒன்றிய பாஜக அரசா னது, “பாரம்பரியத் தொழிலை மேற் கொண்டு வரும் கைவினைக் கலை ஞர்களுக்குப் பயிற்சி - நிதியுதவி வழங்குகிறோம் என ‘பிஎம்-விஸ்வ கர்மா யோஜனா’ என்ற பெயரில், மீண்டும் குலத்தொழிலை அமல்படுத் தும் திட்டத்தை அண்மையில் கொண்டு வந்தது. தச்சர், படகு கட்டுவோர், கொல் லர், பூட்டு தயாரிப்போர், பொற்கொல் லர், பானை வனைவோர், சிற்பம் செதுக்குவோர், முடி திருத்துவோர், பூந்தோட்டம் அமைப்போர், செருப்பு தைப்போர், பாய் பின்னுவோர், கூடை முடைவோர், பொம்மை தயாரிப்போர், தையல்காரர், மீன்பிடி வலை பின்னு வோர் உள்ளிட்ட 18 பாரம்பரிய தொழில்களைச் செய்வோர் - அந்தத் தொழில்களை மேம்படுத்தவும், விரிவு படுத்தவும் ரூ. 15 ஆயிரம் நிதியுதவி, ரூ.1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என்று அறி வித்தது. ஒட்டுமொத்தமாக இந்த திட் டத்திற்கு ரூ. 13 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடும் செய்தது. இது குலத் தொழில் திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் சூழ்ச்சி என்று கடும் எதிர்ப்பும் எழுந்தது. எனினும், விஸ்வகர்மா யோஜனா எனும் குலத் தொழில் திட்டத்தை தனது பிறந்த நாளான, ஞாயிறன்று (செப்டம் பர் 17), பிரதமர் நரேந்திர மோடி, துவக்கிவைக்கிறார்.