புதுதில்லி,மார்ச் 15- ராஜஸ்தானில் நிலைநிறுத்தப்பட்ட ஏவுகணை பராமரிப்பு பணியின் போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறுதலாக பாகிஸ்தான் பகுதியில் விழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறுகையில், பாகிஸ்தானின் மியான்கன்னு நகரில் ஏவுகணை விழுந்ததில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் பகுதிக்குள் பாய்ந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கமான பராமரிப்பு மற்றும் ஆய்வுப் பணியின் போது இரவு 7 மணியளவில் ஏவுகணை பாய்ந்தது. ஆயுத அமைப்புகளின் பாதுகாப்பு விஷயத்தில் அரசாங்கம் “அதிக முன்னுரிமை” அளிக்கிறது. நமது ஏவுகணை அமைப்பு மிகவும் பாதுகாப்பா னது மற்றும் நம்பகமானது ஆகும்” என்று தெரிவித்தார்.