states

img

‘ஜீரோ கேரண்டி’ மோடி

மதுரை,ஏப்.14- இந்தியா கூட்டணி சார்பில்  மதுரை மக்களவைத் தொகுதி யில் போட்டியிடும்  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பா ளர்  சு.வெங்கடேசனை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஏப்ரல் 13 சனிக்கிழமையன்று மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை மாநாட்டில் ஓபுளா படித்துறை ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். இரண்டு மையங்களில் நடை பெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் சீத்தாராம் யெச்சூரி சிறப்புரையாற்றினார்.அவர் பேசியதாவது: மதுரைக்கு வருவது எப்போ தும் எனக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியது. மதுரையில் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படக் கூடிய இந்த தருணத்திலே நான் இங்கு இருப்பதை பெருமகிழ்ச்சி யாக கருதுகிறேன். மதமாச்சரி யங்கள் இல்லாத மகத்தான திரு விழா இந்த சித்திரைத் திரு விழா. சைவம், வைணவம், இஸ் லாமியர்கள் என அனைவரும் கலந்து, இணைந்து கொண்டா டக்கூடிய திருவிழாவாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. 

மகத்தான வைகை நாகரிகம்

கடந்த முறை வந்த போது கீழடி அகழாய்வு  குறித்து அறிந் தேன். வைகை நாகரிகம் என்பது மகத்தான நாகரிகம். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய நாக ரிகமாக வளர்ந்திருக்கிறது என்பது கீழடியின் மூலம்  தெரிய வந்திருக்கிறது. இந்த கீழடி வைகை நாகரிகம் நமது தத்து வார்த்தப் போராட்டத்திற்கு உந்து  சக்தியாக திகழ்ந்துகொண்டி ருக்கிறது என்பதை சுட்டிக் காட்டி விரும்புகிறேன். ஏனென் றால், இன்றைய ஒன்றிய ஆட்சி யாளர்கள் ‘இந்துத்துவா’ சித்தாந் தம் தான் கோலோச்சியது என்று நிறுவுவதற்கு முயற்சிக்கிறார் கள். ஆனால் அதற்கு மாறாக அனைத்துவிதமானப் போக்கு களும் கொண்ட மதச்சார்பற்ற நாகரிகமாக, இந்திய தத்து வார்த்த நிலைபாட்டிற்கு உகந்த நாகரிகமாக வைகை நதிக்கரை நாகரிகம் இருந்திருக்கிறது. இத னைத் தொடர்ந்து மகத்தான நாகரிகமாக கொண்டு செல்லப் போகிறோமா? அல்லது இந்துத் துவா என்ற குறுகிய நோக்கில் கொண்டுசெல்லப் போகிறோ மா? இந்த நாடு எத்தகைய நாக ரிகத்தை பின்பற்றப்போகிறது என்பதை தீர்மானிக்கக்கூடிய கட்டத்திலே நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.அத்த கைய உயர்ந்த நாகரிகத்தின் உயர்ந்த வடிவமாக நாம் உரு வாக்கியிருக்கக்கூடிய மதச்சார் பற்ற குடியரசுக்கு பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கிறது. எனவே மதச் சார்பற்ற ஜனநாயக குடியரசு என் கிற ஆன்மாவை பாதுகாப்பதற்  கான போராட்டத்தில் நாம் இறங்கியிருக்கிறோம்.

கம்யூனிஸ்ட்  இயக்கத்தின் தலம்

கம்யூனிச இயக்கத்தலங் களில் முக்கியமான ஒன்று  மதுரை. கம்யூனிச இயக்கத்தின் மகத்தான மையமாக, தொழி லாளர் வர்க்கத்தின் மையமாக மதுரை திகழ்கிறது. மாபெரும் தலைவர்கள் பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா, கே.பி.ஜானகி யம்மாள் போன்றவர்கள் இந்த மண்ணிலே மக்களுக்காக சேவை செய்தவர்கள் மகத் தான தோழர்களான மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் பொ.மோகன், மறைந்த சட்ட மன்ற உறுப்பினர் என்.நன்மாறன் ஆகியோர்  மதுரையிலிருந்து தேர்வு செய்யப்பட்டனர்.  மது ரைக்கும் எனக்கும் எப்போதும் உணர்வுப்பூர்வமான இணைப்பு என்பது இருந்துகொண்டிருக் கிறது. 

நான்கு தூண்கள்

இந்திய தேசத்தை பாதுகாப் பதற்கான மகத்தான போரிலே ஈடுபட நாம் ஒன்றுகூடியிருக்கி றோம். மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு பெரும் அச்சுறுத்தலில் சிக்கியிருக்கிறது. நாட்டின் அரசி யலமைப்புச்சட்டத்தின் நான்கு தூண்களான மதச்சார்பற்ற ஜன நாயகம், பொருளாதார இறை யாண்மை,  கூட்டாட்சி தத்துவம், சமூகநீதி ஆகிய நான்கு தூண் களும் மிகக்கடுமையாக தாக்கு தலுக்கு உள்ளாகியிருக்கக் கூடிய சூழ்நிலையில் இருக் கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற  பாஜக ஆட்சியை தூக்கியெறியாவிட்டால், இந்த அச்சுறுத்தல் மிகத்தீவிரமடையும் மோசமான சூழல் ஏற்படும்.இது வரை இல்லாத அளவிற்கு மிகமிக முக்கியமான போர் இந்த நாடாளு மன்றத் தேர்தல் என்பதை குறிப் பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

மதவெறியின் உச்சம்

கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில், பாஜக ஆளும் மாநி லங்களில் மதவெறி மிகவும் கூர்மையானதாக மாற்றப்பட்டுள் ளது. லவ் ஜிகாத், பசு பாதுகாப்பு, பொது சிவில் சட்டம் உட்பட மதவெறி நடவடிக்கைகள் மிக வும் தீவிரமடைந்துள்ளன. புல்டோசர் அரசியலை பாஜக ஆட்சியாளர்கள் நடத்தி வரு கிறார்கள். இந்த ஆட்சிக்கு எதி ராக குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர் களை அடக்கி ஒடுக்கும் நடவடிக் கைகளை மேற்கொண்டிருக் கிறார்கள். முஸ்லிம் சிறுபான்மை மக்கள் கொடூரமான தாக்குதல் களுக்கு உள்ளாக்கப்பட்டு வரு கிறார்கள். எதிர்த்து கேட்கும் அனைவரும் ஆள் தூக்கிச் சட்டங்கள் மூலமாக சிறையில் அடைக்கப்படுகிறார்கள். உபா சட்டம், மத்திய புலனாய்வு முக மை ஆகியவற்றை முற்றிலும் தவ றாகப் பயன்படுத்தி, எந்தவித மான சட்ட விசாரணையும் இல்லா மல் ஏராளமானோர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். விசாரணையே இல்லாமல் ஆறா ண்டுகள் முதல் எட்டாண்டுகள் வரை சிறைக்கொட்டடியில் பல ரையும் சித்ரவதை செய்து வரு கிறது மோடி அரசு. பல வழக்கு களில் நீதிமன்றமே நேரடி யாக தலையிட்டு அரசுக்கு எதி ராக தீர்ப்புகளை வழங்கி யிருப்பதையும் பார்க்கிறோம். இந்த கொடிய ஆள்தூக்கிச் சட்டங் களை கொண்டு வந்தது மட்டு மல்ல, பல தருணங்களில் நீதி  பரிபாலன அமைப்பையே கேள்விக்குள்ளாக்குகிற சீர்குலைக்கிற வேலையை மோடி அரசு செய்திருக்கிறது. 

கார்ப்பரேட் - இந்துத்துவா கூட்டணி

இந்திய குடியரசின் இரண்டா வது தூணாக இருப்பது பொரு ளாதார இறையாண்மை. ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை கடந்த பத்தாண்டுகளில் தகர்த்துள்ள பாஜக அரசு, தனது கூட்டுக்களவாணிகளாக உள்ள பெரும் கார்ப்பரேட் முத லாளிகள் மற்றும் கம்பெனி கள் இந்த நாட்டின் சொத்துக் களையெல்லாம் சூறையாடு வதற்கு வழி செய்கிறது. பொதுத் துறை நிறுவனங்கள் அனைத் தும் முற்றாக தனியார்மய மாக்கப்படும் அவலம் தீவிர மடைந்துள்ளது. இயற்கை வளங்கள், வனங்கள், சுரங்கங் கள், கனிமவளங்கங்கள் என அனைத்தும் கார்ப்பரேட் கூட்டுக் களவாணிகளின் கொள்ளை லாபத்திற்காக தாரைவார்க்கப் பட்டு வருகின்றன. மொத்தத் தில் கார்ப்பரேட் மற்றும் இந்துத் துவா கள்ளக் கூட்டணி இந்திய மக்களின் சொத்துக்களை யெல்லாம் சூறையாடி வருகின்றன. வராக்கடன் என்ற பெயரில் கிட்டத்தட்ட 16லட்சம் கோடி ரூபாய்  அளவிற்கு பெரும் முதலாளிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால் நமக்கு அன்னமிடுகிற ஏழை, எளிய விவசாயிகள் வெறும்  20 ஆயிரம் ரூபாய் கடனைக் கூட தள்ளுபடி செய்ய மறுத்தது மோடி அரசு.

உலக மகா ஊழல்

ஊழலை சட்டப்பூர்வமாக ஆக்கிய மோசமான  நடவடிக்கையை பாஜக ஆட்சியில் பார்க்கிறோம்.  தேர்தல் பத்திரம் மூலம் மோடி அரசின் ஊழல்  வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. உச்சநீதிமன்றம் தலையிட்டு தேர்தல் பத்திரம் செல்லாது என்று தீர்ப்பளித்ததை நாம் பார்த்தோம்.  பாஜகவினர் தேர்தல் நன்கொ டை பத்தி ரங்களை மூன்று வழிகளில் வாங்கினார்கள்.ஒன்று, கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி பணம் பறிப்பது. எப்படியென்றால் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ ஆகிய அமைப்பு கள் மூலம் அந்த நிறுவனங்களை குறிவைத்து, ரெய்டு செய்வது. அந்த சோதனைக்கு பயந்து, அந்த நிறுவனத்தினர் என்ன செய்வது என்று கேட்  பார்கள். தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு பணம் கொடுத்தால் ரெய்டுகளை கைவிடுவோம் என்று கூறுவார்கள்.இதன்பிறகு பணம் கைமாறும். பின்னர் சோதனை கைவிடப்படும்.தாக்குதல் கை விடப்படும்.  இரண்டாவதாக, நீ எனக்கு பணம் கொடு, நான்  உனக்கு கைமாறு செய்கிறேன் என்ற அடிப்படை யிலே, தேர்தல் பத்திரம் மூலம் நிதி கொடுக்கும்  நிறுவனங்களுக்கு அரசின் காண்ட்ராக்ட் வேலை களை கொடுப்பது, பொதுத்துறை நிறுவனங்களை தாரைவார்ப்பது என பல ஆயிரம் கோடி ரூபாய்  வணிக ஒப்பந்தங்களை கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு கொடுத்திருக்கிறது மோடியின் பாஜக அர சாங்கம். விமான நிலையங்கங்கள், துறைமுகங் கள் உட்பட கைமாறியது இப்படித்தான். மிகமோசமான மூன்றாவது வழி என்ன வென்றால் பணமோசடி. நஷ்டமடைந்த கார்ப்ப ரேட் நிறுவனங்களிடம் இருந்து கூட பல நூறு  கோடி ரூபாய்களை தேர்தல் பத்திர நன்கொடை களாக பாஜக வாங்கியிருக்கிறது.நஷ்டமடைந்த நிறுவனங்களிலிருந்து பல கோடி ரூபாய் பணம் பாஜக வங்கிக்கணக்கிற்கு எப்படி செல்ல முடி யும்? இது யாருடைய பணம்?இந்த பணம் எங்கி ருந்து வருகிறது? வெளிநாடுகளிலிருந்து வரக் கூடிய பணம் என்று சந்தேகப்படுகிறோம். சர்வ தேச போதை விற்பனைக்கும்பலின் பணமாகக்  கூட இருக்கலாம் இதுதான் கார்ப்பரேட் -இந்துத் துவா கூட்டணி என்று நாம் சொல்கிறோம். ஊழலை  சட்டப்பூர்வமாக மாற்றிய கட்சியாக பாஜக உள் ளது. இந்த பணம் வந்தது குறித்து பாஜகவிடம் விரி வான விசாரணை நடத்த வேண்டும்.

ஏழைகள் மேலும் ஏழைகளாக...

2023 ஆம் ஆண்டு கணக்கின்படி மேல்மட்டத்  தில் இருக்கக்கூடிய 10 சதவீத மக்களின் செல்வக்  குவிப்பு என்பது, 22 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதேவேளையில் கீழ்மட்டத்தில் இருக்கக்கூடிய 50 சதவீத மக்களின் செல்வம் என்பது 13 சதவீதம்  வீழ்ச்சியடைந்திருக்கிறது, இந்த நாட்டின் ஒட்டு மொத்த செல்வத்தை இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டணி கொள்ளையடித்துக்கொண்டு, ஏழை களை மேலும் ஏழைகளாகவும் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் மாற்றியுள்ளது. இதுதான் நாட்டின் பொருளாதார இறையாண்மை மீது  பாஜக அரசு நடத்தியிருக்கக்கூடிய கடுமை யான தாக்குதல். 

‘ஊழலுக்குத் தான் கேரண்டி’

மோடியின் தலைமையில் இருக்கக்கூடிய அமலாக்கத்துறை, எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து சோதனை நடத்துகிறது.தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் ஜார் கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனையும் கைது  செய்து சிறையில் அடைத்துள்ளது.பிரதமர் மோடி  தமிழ்நாட்டிற்கு எட்டு முறை வந்திருக்கிறார். ஊழ லற்ற ஆட்சி அமைவதற்கு நான் கேரண்டி என்று  சொல்கிறார். அமலாக்கத்துறை குறிவைக்கும் தலைவர்கள் பாஜகவில் சேர்ந்துவிட்டால் அவர்  கள் சுத்தமானவர்களாக,அரிச்சந்திரன்களாக மாறுவதை நாட்டு மக்கள் பார்த்துவருகிறார்கள். இதுதான் ஊழலை எதிர்த்து மோடி போராடும் லட்சணமா? எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் மோசமான நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கி றோம். பாஜகவின் நிலைமை ஆட்டம் கண்டிருக்கி றது. அதனால்தான் அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சியினரை குறிவைக்கிறார்கள்.  சட்டவிரோத தேர்தல் பத்திரம் முறையில் பாஜக வாங்கிய கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை குறித்து விரிவான விசாரணை நடத்த  உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புல னாய்வுக்குழு அமைக்க  வேண்டும் என்று நாம்  வலியுறுத்துகிறோம். ஆனால் மோடி அரசு நிச்ச யம் இதனைச் செய்யாது.இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு விசாரணை நடத்த வேண்டிய  கட்டாயம் உள்ளது.

மாநிலங்களை கசக்கிப் பிழியும் காட்சிகள்

கூட்டாட்சி தத்துவம் எனும் நாட்டின் மூன்றா வது தூணை பாஜக ஆட்சி தகர்த்துக்கொண்டி ருக்கிறது. பாஜக ஆட்சிபுரியாத மாநிலங்களில் இதனை செய்துகொண்டிருக்கின்றனர். கேரளா வும் தமிழ்நாடும் மாநில உரிமைகளை பாது காப்பதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகி யிருக்கக்கூடிய சூழலை நாம் பார்க்கிறோம். ஆளு நர்கள் மூலமாக மாநிலங்களை சிதைக்க ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் முயற்சிக்கிறார்கள். மாநி லங்களின் நிதியை உறிஞ்சுவதன் மூலமாக மாநி லங்களை செயலிழக்கச் செய்வதற்கு முயற்சிக்கி றார்கள். மாநிலங்களே இல்லாமல் ஒற்றை ஆட்சி  ஆதிக்கத்தை நிறுவ வேண்டும் என்று பாஜக முயற்சித்துக்கொண்டிருக்கிறது. எதேச்சதிகார இந்துத்துவா பாசிச அரசாங்கமாக நிறுவ முயற் சித்துக்கொண்டிருக்கிறது.இதற்கு தடையாக இருக்கக்கூடிய கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை அமசங்களை தகர்ப்பதற்கு முயற்சிக்  கிறார்கள். மாநிலங்களுக்கு 42 சதவீதம் கொடுக்க  வேண்டிய நிதியை 32 சதவீதத்திற்கு மேல்  கொடுப்பதற்கு மறுக்கிறார்கள்.  

மனுவாத சாதிய ஆதிக்கம்

மோடி ஆட்சியில் தாக்குதலுக்கு உள்ளாகி யிருக்கக்கூடிய நான்காவது தூண் சமூகநீதி.   தலித்கள்,பழங்குடி மக்கள், பெண்கள் மீதான  தாக்குதல்,அவர்களுக்கு இழைக்கப்படும் கொடு மைகள் குறித்து பேசவேண்டியதிருக்கிறது. நாட்டில் ஒவ்வொரு மணிநேரத்திலும் பெண்கள்  மீதான 47  பாலியல் வன்குற்றங்கள் பதியப்படு கின்றன. கார்ப்பரேட் கம்பெனிகளின் லாபங்க ளுக்காக தங்களது சொந்த நிலங்களிலிருந்து பழங்குடி மக்கள் விரட்டப்படுகிறார்கள். தலித்  மக்கள் மீது தினந்தோறும் தாக்குதல் அதிக ரித்துக்கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமான மனுவாத கட்ட மைப்பை பாதுகாக்க பாஜக ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். உயர்சாதி ஆதிக்கம் நீடிக்க  வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால்தான்  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று  மோடி அரசு மறுக்கிறது. இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதால்தான் இந்திய சமூகம் எப்ப டிப்பட்ட நிலையில் இருக்கிறது. யார் யாருக்கு என்ன உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய முடியும். ஆய்வுசெய்தால்தான் பிரச்சனைகளை சரிசெய்து,அந்த மக்களுக்கு நிவாரணத்தை வழங்க முடியும்.தனியார் துறை களில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய முடியும்.

நாடாளுமன்றத்தில்...

நாடாளுமன்றத்தில் 150 எம்.பி.க்கள் சஸ் பெண்ட் செய்யப்பட்டனர்.நானும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன்.இந்திய வரலாற்றிலே நான் கேள்விப்படா விஷயம்.ஒட்டுமொத்தமாக 150 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது. மதுரையில் வேட்பாளராக நிற்கக் கூடிய சு.வெங்கடேசனும் சஸ்பெண்ட் செய் யப்பட்டார். மக்களுக்காக உரிமைக்குரல் எழுப்பியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து வெளியேற்றிவிட்டு,மோசமான சட்டங்களை நிறைவேற்றினர்.

இவரா கேரண்டி?

பிரதமர் மோடி, எல்லாவற்றுக்கும் ‘நான் கேரண்டி’ என்று முழங்குகிறார்.  தொடர்ந்து தமிழ்  நாட்டிற்கு வந்துகொண்டிருக்கிறீர்களே, என்ன கேரண்டியை நிறைவேற்றிக் காட்டினீர்கள்?  மது ரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்தீர்களா? அந்த உத்தரவாதத்தை செயல் படுத்தி காட்டினீர்களா?  இந்த நாட்டில் 79 சதவீத மக்கள் ‘நான்  வெஜி டேரியன்’  - அசைவ உணவு - சாப்பிடக்கூடிய வர்கள். ஆனால் பிரதமர் பிரச்சாரத்தில்  அசைவ  உணவு சாப்பிடுபவர்கள், சைவ உணவு சாப்பிடு பவர்கள் என மக்களைப் பிரிக்க, அதன்மூலம் அணிதிரட்ட முயற்சிக்கிறார். யார் என்ன சாப்பிடு கிறார்கள் என்று பேசுவதுதானா பிரதமரின் வேலை?  ஆட்சிக்காலத்தில் பிரதமர் மோடி செய்து காட்டியது ‘ஜீரோ கேரண்டி’தான்.  அவர்  நிறை வேற்றியது வெறும் பூஜ்யம்தான்.

வேலைவாய்ப்பின்றி இளைஞர்கள் மோச மாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ராணுவத்திலும்  கூட தற்காலிக வேலையைத்தான் உருவாக்கினார். உணவுப்பாதுகாப்பிற்கு கேரண்டி கொடுத்தீர்  களா பிரதமர் மோடி அவர்களே? நாடு முழுவதும்  ஒவ்வொரு நபருக்கும் ஒரு மாதத்திற்கு  5 கிலோ  இலவச அரிசி, 5 கிலோ மானிய அரிசி வழங்க  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்து கிறது. ஆனால் 5 கிலோ மானிய அரிசியை ரத்து  செய்தீர்கள்.  80 கோடி மக்களுக்கு நான் இலவச மாக அரிசி விநியோகிக்கிறேன் என்று மார்தட்டு கிறீர்களே, அது என்ன உங்கள் வீட்டு பணமா?  உண்மையில் மானிய விலையில் கொடுக்கும் உணவு தானியங்களை தொடர்ந்து கொடுத்தி ருந்தால் நாட்டு மக்கள் வெறும் 15 ரூபாயில் 5 கிலோ மானிய அரிசியை பெற்றிருப்பார்கள். அதை  ரத்து செய்ததால் இன்று மிக அதிக விலைக்கு அவர்கள் வெளிச்சந்தையில் உணவு தானியங்கள்  வாங்க வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டி ருக்கிறார்கள்.  இன்றைக்கு மதுரையில் ஒரு கிலோ  அரிசி  50 ரூபாய்,60 ரூபாய் விற்கிறது.  15 ரூபாய்க்கு  பதிலாக 300 ரூபாய் கொடுத்து அதிக விலைக்கு  மக்களை அரிசி வாங்க வைத்த மோசமான நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது மோடி அரசு.  100 நாள் வேலைத்திட்டத்தையும் சீர்குலைத் துள்ளது மோடி அரசு.இந்த வேலை திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் நகர்ப்புற வேலை உறுதித்திட்டதையும் உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.நாடு முழுவதும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

ஆனால் மோடி அரசு இதனைச் செய்யாமல், மக்களை மதரீதியாக பிரித்தாளக்கூடிய வேலை யை செய்து கொண்டிருக்கிறது.இப்படிப்பட்ட வர்களிடமிருந்து இந்தியாவை பாதுகாக்கும் போராட்டத்தில் நாம் இறங்கியிருக்கிறோம். மீண்டும் மீண்டும் ஏன் வருகிறீர்கள்? போகிற இடமெல்லாம், 400 சீட்டுகளுக்கு மேல்  வெல்வோம் என்று பிரதமர் மோடி கூறுகிறார்.  அப்படியென்றால் மீண்டும் மீண்டும் தமிழ்  நாட்டிற்கு ஏன் வருகிறீர்கள்? வட இந்தியா விலே பாஜக தங்களது தளங்களை இழந்து கொண்டிருக்கிறது. தென்னிந்தியாவிலாவது சீட்டுகளை பெற முடியுமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மின்னணு வாக்குப்பதிவு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. இதற்கு தேர்தல் ஆணையம் ஒத்துழைக்க மறுக்கிறது.எதிர்க்கட்சி களின் குரலுக்கு செவிசாய்க்க மறுக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு உள்ளது. எப்படியிருந்தாலும் இந்திய மக்கள் அளிக்கப்போகிற தீர்ப்பு நாட்டில் நிச்சயம்  ஆட்சி  மாற்றத்தை உண்டாக்கும். பாஜகவுக்கு ஒரு இடம்  கூட இல்லை என்று தமிழ்நாட்டு மக்கள் அளிக்கக்  கூடிய தீர்ப்பு தேசத்திற்கே வழிகாட்டக்கூடிய தீர்ப்பாக அமையும். நமது வேட்பாளர் சு.வெங்கடேசன் எம்.பி.யாக  இருந்து கடந்த 5 ஆண்டுகாலத்தில் மகத்தான பல  பணிகளை செய்துள்ளார். அவரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். அவரது ஆங்கில உரையை தீக்கதிர் ஆசிரி யர் எஸ்.பி.ராஜேந்திரன் தமிழில் மொழி பெயர்த்தார்.