states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் சீர்குலைந்து விட்டது. பாகிஸ்தானை கண்டிக்க ஒரு நாடு கூட ஏன் நம் பக்கம் நிற்கவில்லை? இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய டிரம்ப்பிடம் கேட்டது யார்?

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான மதிப்பீடு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. 2 மாவட்டங்களிலிருந்து அறிக்கைகள் காத்திருக்கின்றன. அவை கிடைத்தவுடன், இந்த விஷயத்தை ஒன்றிய அரசாங்கத்துடன் எடுத்துரைத்து நிவாரண தொகுப்பைத் தயாரிக்க முயற்சிப்போம்.

சிவசேனா (உத்தவ்) மாநிலங்களவை தலைவர் சஞ்சய் ராவத்

மகாராஷ்டிரா மாநிலம் துலே நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ரூ.5 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது லஞ்சப் பணம் தான். ஆனால் இந்த பண மீட்பு வழக்கை பாஜக தலைவரும்,  முதலமைச்சருமான பட்னாவிஸ் ஏன் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கவில்லை?

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., சாகேத் கோகலே

அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம், ஆயுதத் தளவாட உற்பத்திக்கு “ரைன்மெட்டல் ஏஜி”  நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகம், முறைகேடுகள் காரணமாக இந்த நிறுவனத்தை தடை செய்திருக்கிறது. தடைகளும், விதிகளும் பிரதமரின் உற்ற நண்பர்களுக்கு இல்லை என்று தெரிகிறது.