states

img

24 மணிநேரத்தில் ‘கிளீன்’ ஆனது கொல்லம்

24 மணிநேரத்தில்  ‘கிளீன்’ ஆனது கொல்லம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது கேரள மாநில மாநாடு கொல்லம் நகரில் நடைபெற்றது. 4 நாட்கள் (மார்ச் 6 முதல் 9 வரை) நடை பெற்ற இந்த மாநாட்டிற்குப் பிறகு 24 மணி நேரத்திற்குள் கொல்லம் நகரத்தை சிபிஎம் ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.  

இரண்டு லட்சம் மக்களும், கால் லட்சம் செம்படை வீரர்களும் கலந்து கொண்ட பேரணி நடைபெற்ற இடமான ஆசிரம மைதானம்,  அதிகாலையிலேயே சுத்தம் செய்யப்பட்டது. கொல்லம் மாவட்டச் செயலாளர் எஸ்.சுதேவன் தலைமையிலான தலைவர்களும் ஊழியர்களும் தூய்மைப்பணிக்கு வந்தபோது, மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்ற சி.கேசவன் நினைவு நகர மண்டபத்தின் மைதானத்திலும் அதன் அருகிலும் அமைக் கப்பட்டிருந்த வளைவுகள், பலகைகள் மற்றும் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. கழிவு களற்ற புதிய கேரளம் பிரச்சாரத்தின் செயல்பாடு களுக்கு என்றென்றும் ஒரு முன்மாதிரியாக இருக்கக்கூடிய ஒரு தலையீடு இது. பசுமை நெறிமுறையைப் பின்பற்றி மாநாட் டின்போது பிளாஸ்டிக் முற்றிலும் ஒழிக்கப் பட்டது.  கண்ணாடி மற்றும் ஸ்டீல் கோப்பை களில்  குடிநீர் வழங்கப்பட்டது.