states

காசிக்கு ஆயுள் தண்டனை

நாகர்கோவில், ஜூன் 14- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி (27).  இவர் பல பெண் களை திருமணம் செய்வதாக ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து வீடியோக்கள், புகைப் படங்களை சமூக வலைத் தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி அந்தப் பெண்களிடம் பணம் பறித்துள்ளார்.  காசி யால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் தர முன்வராத நிலையில், பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 2020 மார்ச் மாதம் 22இல் நாகர்கோவில் எஸ்பி-க்கு மெயில் மூலம் புகார் கொடுக்கப்பட்ட நிலை யில், காசி கைது செய்யப் பட்டார். அவரால் பாதிக்கப் பட்ட பெண்கள் கொடுத்த புகார்களின் அடிப்படை யிலும், கந்து வட்டி புகாரின்  அடிப்படையிலும் நாகர்கோ வில் கோட்டார், வடசேரி, நேச மணிநகர் போலீஸ் நிலையம், நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 120 பெண் களின் சாட்சியம், 400 வீடி யோக்கள் மற்றும் 1,900 ஆபாச படங்கள் காசியின் லேப்டாப்பில் இருந்து கைப் பற்றப்பட்ட பின் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். போக்சோ வழக்கு, பாலியல் பலாத்கார வழக்குகள் என பல வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ள நிலையில், காசியின் வழக்கு அனைத்தும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு விசா ரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் காசிக்கு ஆயுள்  தண்டனை விதித்து நாகர்கோ வில் சிறப்பு நீதிமன்றம் புத னன்று தீர்ப்பு அளித்துள்ளது. பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு ள்ள காசிக்கு ஆயுள் தண்ட னையுடன் ரூ.1.10 லட்சம் அபராதமும் விதிக்கப் பட்டுள்ளது.