புதுதில்லி, மார்ச் 28 - பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission - UGC)) கீழ் நாடு முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங் கள் உள்ளன. இங்கு மாணவர்கள் சேர்க்கை பெறு வதற்கு, இதுவரையிலும், பிளஸ் 2 மதிப் பெண்களே தகுதியாக கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், மருத்துவப் படிப்பு சேர்க்கை க்கு நாடு தழுவிய அளவில் நடத்தப்படும் ‘நீட்’ நுழைவுத் தேர்வு போல, மத்திய பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கு, புதிதாக ‘கியூட்’ (CUET) என்ற ‘பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு’ (The Common University Entrance Test - CUET) நடத்தப்படும், இந்த தேர்வு முடிவுகள் அடிப்படையில்தான் இனிமேல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (UGC) தலைவர் ஜெகதீஷ் குமார் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
“2022-23 கல்வியாண்டு முதல் தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் ‘கியூட்’ தேர்வு மூலமே மத்தியப் பல்கலைக்கழகங்களில் மாண வர் சேர்க்கை நடைபெறும், இந்த நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் 12-ஆம் வகுப்பு ‘என்சிஇஆர்டி’ (National Council of Educational Research and Training - NCERT) பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப் படும். ‘பிரிவு-1ஏ’, ‘பிரிவு-1பி’, பொதுத் தேர்வு மற்றும் பாடப்பிரிவு சார்ந்த தேர்வு என ‘கியூட்’ நுழைவுத் தேர்வு இருக்கும். பிரிவு 1ஏ-யில் ஆங்கிலம், இந்தி, அசாமி, வங்காளம், குஜராத்தி, மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட 13 மொழிகள் இருக்கும். ‘பிரிவு-1பி’ என்பது பிற மொழிகளை கற்க விரும்பும் மாணவர்களுக்கானதாக இருக்கும். இதன் கீழ் மாணவர்கள் பிரெஞ்சு, அரபி, ஜெர்மன் போன்ற மொழிப்பாடங்களைத் தேர்வு செய்து படிக்கலாம்.
‘டொமைன் ஸ்பெசிப்’ எனப்படும் குறிப்பிட்ட பாடவாரியான ஆப்ஷனில் மாண வர்கள் குறைந்தது 6 பாடங்களை தேர்வு செய்ய லாம். அதாவது அவர்கள் இளநிலையில் படிக்க விரும்பும் ஏதேனும் 6 பாடங்களை தேர்வு செய்ய லாம். இந்தத் தேர்வை மாணவர்கள் எதிர்கொண்டு இதில்வரும் மதிப்பெண் அடிப் படையிலேயே மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற முடியும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். “‘கியூட்’ நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களும் கூட தங்களின் மாணவர் சேர்க்கை க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றும் ‘ஆனால், இது கட்டாயமில்லை’ என்பது போலவும் யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்திருந்தார். ஆனால், அனைத்து மாநில பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், கல்லூரி களின் முதல்வர்களுக்கு யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் தற்போது கடிதம் எழுதி யுள்ளார்.
அதில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும், பல்கலைக் கழக பொது நுழைவுத்தேர்வு நடத்தி, அந்த மதிப்பெண்களைக் கொண்டே வரும் கல்வி யாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். “மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த மாநில உயர்கல்வி நிலையங்கள் முன்வர வேண்டும்” என்றும், “மாணவர்களுக்கு சம வாய்ப்பு ஏற்படுத்த இந்த பொது நுழைவுத் தேர்வு முறை உதவும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு அனுமதிக்கப்படாது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், யுஜிசி செயலாளர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது.