பெங்களூரு, ஜூன் 24- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வின் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) நிறுவனம் நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம் படுத்துவதற்காக தயாரித்த ஜிசாட்-24 என்ற அதி நவீன செயற்கைக்கோள் விண் ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ வடிவமைத்த அதிக எடை கொண்ட 42 ஆவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் 24 கடந்த மே 17 ஆம் தேதி விமானம் மூலம் பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள பிரெஞ்ச் கயானாவின் கொரு ஏவு தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கனரக ராக்கெட் ஏரியன்-5 மூலம் ஜூன் 23 அன்று செலுத்தப்பட்டு வெற்றிகர மாக புவிநிலை சுற்றுப்பாதை யில் நிலைநிறுத்தப்பட்டது. இதுகுறித்து நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறு வனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராதா கிருஷ்ணன் துரைராஜ் கூறு கையில், “ஜிசாட் 24 செயற் கைக்கோள், இந்திய விண் வெளித் துறையில் மேற் கொள்ளப்பட்ட சீர்திருத் தங்களுக்குப் பிறகு உரு வாக்கப்பட்டதாகும். ஜிசாட்-24 செயற்கைக்கோளில் க்யூ பேன்ட் டிரான்ஸ்பாண்டர் உள்ளிட்ட நவீன அம்சங்கள் இருப்பதால் தொலைக் காட்சி டிடிஎச் மற்றும் செல்போன் சேவைக்குப் பயன்படும். இதன் சேவை கள் அனைத்தும் ‘டாடா பிளே’ (Tata Play ) நிறு வனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.