லக்னோ, பிப்.17- அசாதுதீன் ஒவைசி மீது துப்பாக் கிச் சூடு நடத்தியதாக கைது செய் யப்பட்டுள்ள சச்சின் சர்மாவின் குடும் பத்திற்கு பாஜக தலைவர் சுனில் பரலா நேரில் சென்று ஆதரவு தெரிவித்தி ருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மஜ்லிஸ் கட்சித் தலைவரான அசாதுதீன் ஒவைசி, கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி, உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகேயுள்ள கிதாரி பகுதியில், தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, தில்லி நோக்கி காரில் சென்று கொண் டிருந்தார். இவரது கார், ஹபூர் மாவட் டம் பில்குவா பகுதிக்கு உட்பட்ட சாஜர்சி சுங்கச்சாவடி அருகே சென்ற போது, 2 பேர் காரை நோக்கி துப்பாக்கி யால் சுட்டனர். இதில் கார் சேதமடைந் தாலும் நல்வாய்ப்பாக ஒவைசியும், அவருடன் சென்றவர்களும் காய மின்றி உயிர் தப்பினர். இந்த கொலை முயற்சி தொடர் பாக, கவுதம் புத்தர் நகர் மாவட்டம் படல்பூரில் வசிக்கும் சச்சின் சர்மா என்பவரையும், அவரது கூட்டாளி யான சஹாரன்பூரைச் சேர்ந்த ஷு பமையும் போலீசார் கைது செய்தனர். இந்துக்களுக்கு எதிராக ஒவைசி பேசிவந்ததால், அவரைக் கொலை செய்ய முயன்றதாக கைதான இரு வரும் வாக்குமூலம் அளித்ததன் பேரில் அவர்கள் தற்போது சிறையில் இருக்கின்றனர். இந்நிலையில், ஓவைசி மீது துப் பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக கைதாகி சிறையில் இருக்கும், சச் சின் சர்மா-வின் குடும்பத்தினரை, பாஜக தலைவர்களில் ஒருவரும் உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர் நல வாரியத்தின் தலைவருமான சுனில் பரலா நேரில் சென்று சந்தித் துள்ளார். “சச்சின் சர்மாவின் சகோதரர் மற்றும் பெற்றோரை நாங்கள் சந் தித்தோம், அவர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டார்களா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஒவைசி எப்போதும் மிகவும் ஆக்ரோஷமான மற்றும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். சச்சின் சர்மா வின் குடும்பத்திற்கு முழு ஆதரவை அளிக்க நாங்கள் உறுதியாக உள் ளோம்” என்று பேட்டியும் அளித்துள் ளார்.