பெங்களூரு, ஏப். 7 - பெங்களூரு காட்டன்பேட்டை அருகே ஜெய்மாருதி நகரில் வசித்தவர் சந்துரு (22). தலித் இளைஞரான இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு, நள்ளிரவில் தனது நண்பர் சைமன் ராஜூவுடன் சிக்கன் ரோல் சாப்பிட ஜேஜே நகரிலுள்ள உணவகத்திற்கு பைக்கில் சென்றபோது, அங்கு ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஷாகித் என்பவர் உள்பட 3 பேரை ஜேஜே நகர் போலீ சார் கைது செய்துள்ளனர். இதனிடையே, கர்நாடக உள் துறை அமைச்சர் அரக ஞானேந்திரா பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. “இளைஞர் சந்துரு தலித் சமூ கத்தை சேர்ந்தவர். சிக்கன் சாப்பிடச் சென்ற சந்துருவை உருது மொழி பேச கூறியுள்ளனர். ஆனால் அவருக்கு கன்னடம் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. இதனால் முஸ்லிம் இளைஞர்கள் ஆத்திரம் அடைந்து, அவரை படுகொலை செய்துள்ளனர்’’ என்று அரக ஞானேந்திரா குண்டைத் தூக்கிப் போட்டார்.
பாஜக மூத்த தலை வர் சி.டி. ரவியும் அதையே வழிமொழிந் ததால், கடும் சர்ச்சை எழுந்தது. ஆனால், சந்துரு ஜேஜே நகர் சென்றபோது, அவர் ஓட்டிய பைக் கட் டுப்பாட்டை இழந்து ஷாகீத் என்பவரின் பைக்கில் மோதியது. இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில்தான் சந்துரு கத்தியால் குத்தப்பட்டார் என்பதும், விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார் என்றும் போலீஸ் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது. இவ்வாறு உண்மை வெளிப்பட் டுள்ள நிலையில், பாஜக தலை வர்களும், அமைச்சர் அரக ஞானேந்தி ராவும் சந்துரு படுகொலைக்கு சாதி, மதம் மற்றும் மொழிச்சாயம் பூசி கல வரத்தை தூண்ட முயன்றது கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. “என்ன பேசுகிறோம் என்றே அமைச்சருக்கு தெரியவில்லை ஹர்ஷா கொலை வழக்கிலும், மைசூரு வில் நடந்த பாலியல் வல்லுறவு வழக்கி லும் இதேபோல்தான் சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இவர் காவல்துறை அமைச்சராக நமக்கு கிடைத்திருப்பது துரதிஷ்டவச மானது’’ என்று, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வரு மான சித்தராமையா கண்டனம் தெரி வித்துள்ளார். மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமியும், அமைச்சர் அரக ஞானேந்திராவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.