புதுதில்லி,மார்ச் 8- இந்தியா மற்றும் சீனா இடையேயான தளபதிகள் மட்டத்திலான 15 ஆவது சுற்று பேச்சுவார்த்தை மார்ச் 11 ஆம் தேதியன்று நடைபெறும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரி வித்துள்ளன. இரு தரப்பிலும் தளபதிகள் மட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 14 சுற்று பேச்சுவார்த்தைகளின் முடிவால், பான்காங் சோ, கல்வான் மற்றும் கோக்ரா ஹாட் ஸ்பிரிங் ஆகிய பகுதிகளின் வடக்கு மற்றும் தெற்கு கரை பகுதிகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளில் படைகள் வாபஸ் பெறுவது உள்ளிட்ட விசயங்களில் தீர்வு ஏற்படுவதற்கான முடிவுகளை மேற்கொள்வதற்கான பணிகளில் இரு நாட்டு ராணுவமும் கவனம் செலுத்த உள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஏற்று கொள்ள கூடிய ஒரு தீர்வு ஏற்படுவதற்காக இரு நாட்டு தரப்பிலும் சமீபத்தில் வெளியிடப்பட்டு வரும் அறிக்கைகள் ஊக்கமளிக்கின்றன என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய தரப்பிலுள்ள சுஷூல் மோல்டோ முனை பகுதி சந்திப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.