லக்னோ, பிப்.26- உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்த லையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதனொரு பகுதியாக, உ.பி. மாநிலம், அமே தியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியிருப்பதாவது: “இந்திய பிரதமர் வாக்குகளுக்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார் என்பது உத்தரப் பிரதேச மக்களுக்கு நன்றாக தெரியும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக வாக்குறுதி அளித்த நரேந்திர மோடி, மூன்று கறுப்புச் சட்டங்களை (வேளாண் சட்டங்கள்) அமல்படுத்தியதை நாடு அறியும். விவசாயிகளுக்குக் கிடைக் கும் குறைந்தபட்ச வருவாயையும் அவர் களிடமிருந்து பறித்து, இந்தியாவின் மிகப்பெரிய 4-5 பில்லியனர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அவர் கொண்டு வந்த சட்டங்களின் குறிக்கோளாக இருந்தது.
காங்கிரசின் 70 ஆண்டு கால ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று அவர்கள் (பாஜக) கூறுகிறார்கள் என்றால், உண்மை யில் இந்த 70 ஆண்டுகளில் அம்பானி, அதானிக்கு எதுவும் நடக்கவில்லை என்று அர்த்தம். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், இந்தியாவின் பெரிய கோடீஸ்வரர்கள் வேலை வழங்குவதில்லை. சிறு கடைக்கா ரர்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயி கள்தான் அதிக வேலைகளை வழங்கு கிறார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி யும் அவரது நண்பர்களும் இந்திய வேலைவாய்ப்புத் துறையின் முது கெலும்பை அழித்து விட்டனர். கொரோனா சமயத்தில் நான் சொல் வதை யாரும் (ஒன்றிய அரசு) கேட்க வில்லை. ஆனால், அதன்பிறகு, நீங்கள் கங்கையில் இறந்த உடல்களைப் பார்த்தீர்கள். எனவே, அவர்களுக்கு (பாஜக) மக்களாகிய நீங்கள்தான் பாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி பேசியுள்ளார்.