சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்பது தமிழ்ப்பழமொழி. சட்டியில் இல்லாமலேயே அகப்பையில் வந்தால், ஏதோ தவறு இருக்கிறது என்றுதான் பொருள். லாபம் ஈட்டுகிற கம்பெனிகள், தங்கள் லாபத்தில் சிறு பகுதியை அரசியல் கட்சிகளுக்கு நன் கொடையாக அளிக்கலாம். ஏனென்றால் அர சியல் கட்சிகளுக்கு என்று தனியாக வருவாய் கிடையாது. ஆனால், அப்படி அளிக்கப்படுகிற நன்கொடை, அந்த நிறுவனம் முந்தைய 3 ஆண்டுகளில் ஈட்டியுள்ள சராசரி லாபத்தில் 7.5 சதவீதத்துக்கு மிகாமல்தான், எல்லா அரசியல் கட்சிகளுக்கும் சேர்த்து மொத்தமாகவே நன்கொடை அளிக்கலாம் என்று சட்டம் இருந்தது. அதை மோடி அரசு நீக்கிவிட்டது. நீக்கி னால் என்ன, நஷ்டமான நிறுவனங்கள் எப்படி நிதியளிக்கும் என்றுதான் நாம் எண்ணுவோம். ஆனால், நடந்திருப்பது வேறு. வெறும் ரூ.1 லட்சம் முதலீடு கொண்ட நிறு வனமான சஃபல் கோயல் ரியால்ட்டி என்ற நிறு வனம், பாஜகவுக்கு ரூ.35 கோடியை தேர்தல் பத்திரங்களாக வழங்கியுள்ளது. அதைப் போலவே ரூ.1 லட்சம் மட்டும் முத லீடு செய்யப்பட்ட நிறுவனமான சந்தர் கமர்ஷியல்ஸ் நிறுவனம் ரூ.20 கோடி பாஜக வுக்கு தேர்தல் பத்திரங்களாக அளித்துள்ளது. ஜெய் பாரத் டெக்னிக்கல் சர்வீசஸ் என்ற மற்றொரு ரூ.1 லட்சம் முதலீடு நிறுவனம், பாஜக வுக்கு ரூ.10.5 கோடி நிதியை தேர்தல் பத்தி ரங்களாக வழங்கியுள்ளது. இப்படி ரூ.1 லட்சம் மட்டும் முதலீடு கொண்ட மேலும் 6க்குக் குறையாத நிறுவனங்கள், ரூ.5இலிருந்து 10 கோடி வரை தேர்தல் பத்தி ரங்கள் மூலம் நிதியளித்துள்ளன.
மொத்தத்தில் ரூ.5 கோடிக்கும் குறைவான முதலீடு கொண்ட 25 நிறுவனங்கள், ரூ.250 கோடிக்கும் அதிகமான நிதியை தேர்தல் பத்திரங்கள் மூலம் அளித்துள்ளன. பல நிறுவனங்கள் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே பல கோடி ரூபாய்களுக்குத் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன. கொரோனா பெருந்தொற்று, அதனால் நடை முறைப்படுத்தப்பட்ட லாக் டவுன் ஆகியவற்றால் “பழந்தின்று கொட்டை போட்ட” நிறுவனங்களே பின்னடைவைச் சந்திந்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், 2020இல் தொடங்கப்பட்ட 9 நிறு வனங்கள், 2021இல் தொடங்கப்பட்ட 11 நிறு வனங்கள் ஆகியவை சுமார் ரூ.100 கோடி அளவுக்குத் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசி யல் கட்சிகளுக்கு நிதியளித்துள்ளன. 2018க்குப் பின் தொடங்கப்பட்ட 43 நிறுவனங்கள் மட்டும், ரூ.384.5 கோடிக்குத் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன. அதாவது, இந்த நிறுவனங்கள் எல்லாம், தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியளிக்கும் நோக்கத்துக்காக மட்டுமே தொடங்கப்பட்டிருக்க வேண்டும். முதலீடு, லாபம் என்றெல்லாம் பெரிதாக இல்லாமலே - சட்டியில் இல்லாமலே அகப்பையில் வந்திருக்கிறது என்றால், அது வேறிடத்திலிருந்துதானே வந்திருக்க வேண்டும்? கருப்புப் பணம், கள்ளக் கடத்தல் பணம் போன்றவற்றை வெள்ளையாக்கி, பாஜகவின் கணக்கில் வரவு வைக்கிற வேலையைத்தான் இந்தத் தேர்தல் பத்திரங்கள் செய்துள்ளன. கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதே முதல் வேலையாகச் செய்துகொண்டே, அமலாக்கத் துறை போன்ற மத்திய முகமைகளை மற்றவர் கள் மீது ஏவிக்கொண்டிருந்திருக்கிறது பாஜக!