புதுதில்லி, ஜன.20- பாஜக எம்பி (உத்தரப்பிரதேசம்) பிரிஜ் பூஷன் சரண் சிங் (66) கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவ ராக செயல்பட்டு வருகிறார். இவர் பல ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகள், புதி தாக பயிற்சிக்கு சேரும் சிறுமிகள், பெண் பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் பாலியல் தொல்லை அளிப்பதாகவும், பிரிஜ் பூஷன் சிங்கிற்கு நெருக்கமாக இருக்கும் சில பயிற்சியாளர்களுக்கும் பாலியல் தொல்லை, மனதளவில் நெருக்கடி அளித்ததாகவும் இந்திய நட்சத்திர வீராங்கனையும், போகத் சகோதரிகளில் ஒருவருமான வினேஷ் போகத் குற்றம்சாட்டினார். வினேஷ் போகத்தின் குற்றச்சாட்டு க்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் தில்லி ஜந்தர் மந்தரில் பிரிஜ் பூஷ னுக்கு எதிராக போராடினர். அடுத்த சில மணி நேரங்களில் 150-க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர் - வீராங் கனைகளும் தேசியக் கொடியோடு போராட்டத்தில் கலந்து கொண்டனர். கடும் பனிப்பொழிவுக்கு இடையே வெள்ளியன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெற்ற நிலை யில், தன் மீதான பாலியல் குற்றச் சாட்டுகளை மறுத்துள்ள பிரிஜ் பூஷன், ‘‘சிபிஐ அல்லது எந்த அமைப்பு கள் விசாரணை நடத்தட்டும், நான் பதவியில் இருந்து விலகப் போவ தில்லை’’ என பேசியுள்ளார்.
3 கோரிக்கைகள்
பாலியல் தொல்லை குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் விசார ணை மேற்கொள்ளவேண்டும், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலை வர் பதவியில் இருந்து விலக வேண்டும், இந்திய மல்யுத்த சம்மேள னத்தைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை மல்யுத்த போராட்டக் குழு முன்வைத்துள்ளது.
பி.டி.உஷாவிற்கு கடிதம்
இந்த விவகாரத்தில் துரித நட வடிக்கை எடுக்கக்கோரி இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவரும், முன்னாள் தடகள நட்சத்திரமுமான பி.டி.உஷாவிற்கு (58) வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், ரவி தாஹியா, தீபக் புனியா ஆகியோர் கொண்ட குழு கடிதம் எழுதியுள்ளது. கடிதத்தில் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரை பதவியிலிருந்து நீக்கும் வரை ஓய மாட்டோம் என்றும் தெரிவித்துள்ள னர்.
ஒன்றிய அமைச்சர் பேச்சுவார்த்தை தோல்வி
ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர், ஜந்தர் மந்தர் போராட்டக் களத்திற்கு நேரடியாக சென்று மல்யுத்த வீரர்-வீராங்கனைகளை சந்தித்தார். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்த போதிலும், அமைச்சர் அனுராக் தாகூரின் பதில் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என கூறி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனர்.