states

மல்யுத்த வீராங்கனைகள் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை

புதுதில்லி, ஜூன் 10- மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தின் பொழுது வெறுப் புப் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என தில்லி காவல்துறை உயர்நீதி மன்றத்தில் கூறியுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சிங் மீதான பாலி யல் குற்றங்கள் புகார் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி தில்லி ஜந்தர் மந்தரில் முன்னணி மல்யுத்த வீராங்க னைகள், வீரர்கள் கடந்த ஏப்ரல் இறுதியில் இருந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த சனி யன்று வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகி யோர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், தொடர்ந்து  புதனன்று ஒன்றிய விளையாட் டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஜூன் 15-க்குள் பிரிஜ் பூஷண் மீதான விசாரணையை முடித்து, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்த நிலையில், ஜூன் 15 வரை போராட் டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்ப தாக வீரர்கள் அறிவித்தனர். இந்நிலையில், முன்னணி மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் மீது, வெறுப்பு பேச்சு புகார் மற்றும் பொய்யான குற்றச்சாட்டு கூறிய தற்காக வழக்குப் பதிவு செய்யக் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அம்மனுவிற்கு பதில் அளிக்கும் விதமாக அது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக் கையை (action taken report) நீதிமன்றத்தில் தில்லி போலீசார் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கை யில்,”தில்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின்போது மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் பிரதமர் மோ டிக்கு எதிராக எழுப்பிய கோஷம், வெறுக்கத்தக்க பேச்சு வகையின் கீழ் வரக்கூடியது. இது அவர்கள் பிரதமரை கொலைசெய்யப் போ வதாக மிரட்டியதைத் தெளிவாக உணர்த்தியது” என்று புகார்தாரர் தெரிவித்திருந்தார்;  புகார்தாரர் தனது புகாரில் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு ஆதாரமாக அவர் கொடுத்திருந்த வீடியோ காட்சிகளில் எந்த விதமான வெறுக்கத்தக்க முழக்கங்களும் இல்லை. போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், பிற மல்யுத்த வீராங்கனைகள், வீரர் கள் அதுபோன்ற எந்த விதமான முழக்கங்களையும் எழுப்பவில்லை”  என்று தில்லி காவல்துறை தெரி வித்துள்ளது. மேலும் இந்த மனு வினை தள்ளுபடி செய்யவும் தில்லி காவல்துறை வலியுறுத்தி யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.