states

“ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக செங்கோல் வழங்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை”

அமித்ஷாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலடி

புதுதில்லி, மே 27 - ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக, முதல் பிரதமரான நேருவிடம் செங்கோல் வழங்கப் பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். “புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில், சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி யிருந்தார். மேலும், இந்த செங்கோல் நாடு சுதந்திரம் அடைந்தபோது, ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக நேரு-வுக்கு திருவாவடுதுறை ஆதினத்தால் வழங்கப்பட்டது என்றும் கூறி யிருந்தார். இந்நிலையில், ஆட்சி மாற்றத்தின் அடை யாளமாக செங்கோல் வழங்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று, அமித்ஷா வுக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் மேலும் கூறியிருப்பதாவது: “அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் ஒரு மத அமைப்பால் உருவாக்கப்பட்ட, சென் னையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கம்பீரமான செங்கோல் ஆகஸ்ட் 1947-இல் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது என்பது உண்மை. ஆனால், ஆங்கிலேயர்களிடம் இருந்த அதி காரம் இந்தியாவுக்கு மாற்றப்படும் அடை யாளமாக இந்த செங்கோல் வழங்கப்பட்ட தற்கான ஆதாரம் ஏதும் இல்லை.  

மவுண்ட்பேட்டன், ராஜாஜி, ஜவஹர்லால் நேரு ஆகியோர் அவ்வாறு விவரித்ததாக ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை. செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுவது பொய்யானது. செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த தாக சிலர் கருதி, அது வாட்ஸ்-ஆப்பில் பகிரப் பட்டு, பின்னர் அதனை மோடி ஆதரவாளர்கள் ஊடகங்களில் முழங்கி வருகின்றனர்.  ராஜாஜி குறித்து நன்கு அறிந்த அறிஞர் கள் இருவர், செங்கோல் தொடர்பாக கூறப்படு வதைக் கேட்டு ஆச்சரியத்தை வெளிப்படுத்தி உள்ளனர். நேரு-வுக்குக் கொடுக்கப்பட்ட செங்கோல் பின்னர் அலகாபாத் அருங்காட்சி யகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடையும்போது டிசம்பர் 14, 1947 அன்று ஜவஹர்லால் நேரு என்ன சொன்னாரோ அதுதான் அவர் சொன்னது. அதுதான் ஆதாரப்பூர்வமானது.  தமிழகத்தில் பாஜக-வுக்கு இருக்கும் அரசியல் நோக்கங்களுக்காக பிரதமரும் அவரது ஆதரவாளர்களும் செங்கோல் விவ காரத்தைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப உண்மைகளை திரிக்கிறார்கள்.  புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைப்பதற்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஏன் அழைக்கவில்லை என்பதுதான் உண்மையான கேள்வி. என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.