சென்னை, மே 24- புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறி வித்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப் பட்ட தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் நூற்றாண்டை நெருங்கும் நிலையில், 65,000 சதுர மீட்டர் பரப் பளவில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் பணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கியது. ரூ. 20,000 கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா பணி தற்போது நிறைவடைந்துள்ளது. 4 மாடிகள் கொண்ட இந்தப் புதிய நாடாளுமன்றம் ரூ.970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 1,224 எம்.பி.க்கள் அமர முடியும். இந்திய ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பிரம் மாண்ட அரசியல் சாசன அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கேன்டீன், வாகன பார்க்கிங் வசதி களும் பிரம்மாண்டமாக அமைக்கப் பட்டுள்ளன. இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டடம் மே 28 ஆம் தேதி திறக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடியே திறந்து வைப்பதை கண்டித்தும், திறப்பு விழாவிற்கு குடி யரசுத் தலைவரை அழைக்காததை கண்டித்தும் இவ்விழாவை புறக் கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறி வித்துள்ளன. இந்த நிலையில், புதிய நாடாளு மன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்க ணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. இந்தத் தகவலை திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். முன்னதாக சிபிஎம், சிபிஐ, ஆர்ஜேடி, விசிக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சி களும் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித் துள்ளன. கனிமொழி விளக்கம் சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளு மன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, “நாடாளுமன்ற திறப்பு விழா முறையாக நடத்தப்படவில்லை என்பதால் அதனை புறக்கணித்துள்ளதாக” தெரி வித்தார்.