states

img

‘திரிபுராவில் பட்டப்பகலில் ஜனநாயகப் படுகொலை’

அகர்தலா பாஜக ஆளும் வட கிழக்கு மாநி லங்களில் ஒன் றான திரிபுராவில் பஞ்சா யத்து தேர்தல் அறிவிக்கப் பட்ட நாள் முதல் தோல்வி பயத்தால், பாஜக குண்டர் கள் காவல்துறை உதவி யுடன் மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். சனியன்று வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக ஊர் வலமாக சென்ற பெலோனி பகுதி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஊழியரும், ராஜ்நகர் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளருமான பாதல் ஷில் (49) வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற பொ ழுது பொது இடத்திலேயே பாஜக குண்டர்களால் படு கொலை செய்யப்பட்டார்.  இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனம் குவிந்து வரும் நிலையில், “திரிபுராவில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படு கிறது” என காங்கிரஸ் கட்சி யும் கண்டனம் தெரிவித்துள் ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொ துச்செயலாளர் ஜெய்ராம்  ரமேஷ் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”பஞ்சாயத்து தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவின் வன்முறை சம்பவங்களால் திரிபுராவில் ஜனநாயகம் பட்டப்பகலில் படுகொலை  செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற தன்னிச்சை யான வன்முறை சம்பவங் கள் பாஜகவின் இரட்டை இஞ்சின் அரசாங்கத்தின் சூழ்ச்சி ஆகும். திரிபுரா வன் முறை சம்பவங்கள் உண்மை யான அரசியலமைப்பு படுகொலை ஆகும்” என கூறியுள்ளார்.