states

img

பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்வதாக உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்த தில்லி போலீஸ்

புதுதில்லி, ஏப். 28 - இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அவர் மீது வெள்ளி மாலைக்குள் வழக்கு  பதிவு செய்யப்படும் என தில்லி காவல்துறை பெயரில் ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் உறுதி அளித்தது.  பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தர விடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உள்பட எட்டு மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான விசாரணை மீண்டும் வெள்ளியன்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதி பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. சொலிசிட்டர் ஜென ரல் துஷார் மேத்தா ஆஜரானார். அப்போது, அவர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்  தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ்  பூஷன் சரண் சிங், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரில் வெள்ளிக்கிழமை மாலைக்குள் முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்படும் என்று தில்லி காவல்துறை தெரிவித்துள்ளதை பதிவு செய்தார். இதையடுத்து, பாலியல் குற்றச்சாட்டு எழுப்பியுள்ள மல்யுத்த வீராங்கனையான ஒரு சிறுமிக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறு த்தல் குறித்து, விசாரித்து நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென தில்லி காவல் ஆணை யருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அச்சிறுமிக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வும் காவல் ஆணையருக்கு உத்தர விட்டனர். இந்த வழக்கு மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.  பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என தில்லி காவல்துறை கூறிய போதிலும், வெள்ளியன்று இரவு 8.30 மணி வரை அவர் மீது முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யப்படவில்லை.