states

img

‘பிரதமர் மோடி - பணவீக்கம்’ இரண்டுமே நாட்டிற்கு தீங்கு!

லக்னோ, ஜன.3- “பிரதமர் மோடி பதவியிலி ருக்கும் வரை பணவீக்கமும், வேலை யின்மையும் அதிகரிக்கத்தான் செய் யும். மோடி - பணவீக்கம் இரண்டுமே நாட்டிற்கு தீங்கு” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷனரிடே விமர்சித்துள்ளார்.  உத்தரப்பிரதேச காங்கிரஸ் அலு வலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ‘‘புத்தாண்டு தினத்தில் பிரதமர் மோடி, பண வீக்கத்தில் மேலும் தாக்கு தலை உருவாக்கியுள்ளார். புத்தாஒ டின் முதல் நாளில் மக்கள் மோடி அர சின் புதிய பரிசாக பணவீக்கம், வேலை வாய்ப்பின்மையை பெற்றுள்ளனர்.

2011-இல் காங்கிரஸ் ஆட்சியின்போது வேலைவாய்ப்பின்மை 2 சதவிகித மாக இருந்தது. இன்று இளைஞர் களுக்கு எதிரான கொள்கையைக் கொண்ட பாஜக ஆட்சியில் அது 10 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் சுமை உயர்ந்து கொண்டே செல்கிறது. மொத்த விற் பனை விலைக் குறியீடு, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத 14.23 சதவிகி தம் என்ற உச்சத்தை 2021 நவம்பரில் எட்டியுள்ளது. அதன் தாக்கம் புத்தா டில் விரைவாக வெளிப்படும். புத்தாண்டுக்குள் நுழைந்துள்ள மக்கள் இரும்புப் பொருட்கள், சிமெண்ட், மின்சாரத்திற்காக அதிக அளவில் பணம் செலுத்த அவர்களது பாக்கெட்டை வைத்துக் கொள்ள தயா ராக இருக்க வேண்டும். மோடி இருந்தால், அங்கே பண வீக்கம் இருக்கும். மோடி - பணவீக்கம் இரண்டுமே நாட்டிற்கு தீங்கானது என்று மக்கள் தற்போது தெளிவாக பேசத் தொடங்கியுள்ளனர்.’’ இவ்வாறு சுப்ரியா ஷனரிடே கூறி யுள்ளார்.